பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ஷால்பி ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம்பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ஷால்பி ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம் ... அரசுக்கு ரூ.400 கோடி இழப்பிற்கு வாய்ப்பு: ‘ஆர்ஜியோ’ நிறுவனம் குற்றச்சாட்டு அரசுக்கு ரூ.400 கோடி இழப்பிற்கு வாய்ப்பு: ‘ஆர்ஜியோ’ நிறுவனம் குற்றச்சாட்டு ...
‘ஜி.எஸ்.டி., அமலாகும் முன் விலையை உயர்த்தினால் நடவடிக்கை’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2017
03:34

புதுடில்லி : ‘ஜி.எஸ்.டி., அம­லா­வ­தற்கு முன், பொருட்­கள் விலையை உயர்த்­தும் நிறு­வ­னங்­கள் மீது, நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்’ என, மத்­திய வரு­வாய் துறை செய­லர் ஹஷ்­முக் அதியா எச்­ச­ரித்து உள்­ளார்.

நாடு முழு­வ­தும், ஜூலை, 1 முதல், ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி அம­லுக்கு வர உள்­ளது. இது­வரை, 1,200 பொருட்­கள் மற்­றும் 500 வகை­யான சேவை­க­ளுக்கு, 5, 12, 18 மற்­றும் 28 சத­வீ­தம் என, நான்கு வித வரி விகி­தங்­கள் அறி­விக்­கப்­பட்டு உள்ளன. இதில், சேவை­கள் வரி, தற்­போ­தைய, 15 சத­வீ­தத்­தில் இருந்து, 18 சத­வீ­த­மாக உயர உள்­ளது. எனி­னும், சேவை நிறு­வ­னங்­கள், மூலப்­பொ­ருட்­க­ளுக்கு செலுத்­திய வரியை திரும்­பப் பெறும் என்­ப­தால், தற்­போ­தைய அள­வி­லேயே, வரி விகி­தம் இருக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.இந்­நி­லை­யில், ஒரு­சில நிறு­வ­னங்­கள், அதிக லாபம் ஈட்­டும் நோக்­கில், விலையை உயர்த்தி உள்­ளது, மத்­திய அர­சின் கவ­னத்­திற்கு வந்­துள்­ளது.

இது குறித்து, வரு­வாய் துறை செய­லர் ஹஷ்­முக் அதியா கூறி­ய­தா­வது: ஜி.எஸ்.டி., சட்­டத்­தில், வரி குறைக்­கப்­பட்­டால், அதன் பலனை நிறு­வ­னங்­கள், நுகர்­வோ­ருக்கு வழங்க வேண்­டும் என்ற விதி­முறை உள்­ளது. அவ்­வாறு பலன்­கள் வழங்­கப்­ப­டு­கி­றதா என்­பதை கண்­கா­ணிக்க, லாப தடுப்பு ஆணை­யம் அமைக்­க­வும், சட்­டத்­தில் வகை செய்­யப்­பட்டு உள்­ளது.ஆகவே, ஜி.எஸ்.டி., அம­லுக்கு வரும் வரை, நிறு­வ­னங்­கள், அவற்­றின் தயா­ரிப்பு பொருட்­கள், சேவை­கள் ஆகி­ய­வற்­றுக்­கான விலையை உயர்த்த வேண்­டாம். மூலப்­பொ­ருட்­கள் விலை உயர்வை, சமா­ளிக்க முடி­யாத சூழல் ஏற்­பட்­டால் மட்­டுமே, விலை உயர்வு குறித்து, நிறு­வ­னங்­கள் யோசிக்­க­லாம்.

அவ்­வா­றின்றி, லாப நோக்­கத்­தில் விலையை உயர்த்­தி­னால், அந்­நி­று­வ­னங்­களின் செயல்­பா­டு­கள், நிதி நிலை அறிக்­கை­கள் ஆகி­யவை குறித்து, லாப தடுப்பு ஆணை­யம் விசா­ரித்து, உரிய நட­வ­டிக்கை எடுக்­கும். சரக்கு மற்­றும் சேவை வரி அம­லா­னால், எண்­ணற்ற பொருட்­களின் விலை குறை­யும். குறிப்­பாக, உணவு தானி­யங்­கள் பூஜ்­ஜிய வரி­யின் கீழ் கொண்டு வரப்­பட்­டுள்ளன. இவ்­வாறு அவர் கூறி­னார்.

கூடுதல் வரிஜி.எஸ்.டி.,யால், மாநி­லங்­க­ளுக்கு ஏற்­படும் இழப்பை ஈடு செய்ய, 55 வகை­யான ஆடம்­பர பொருட்­க­ளுக்கு, கூடு­தல் வரி விதிக்க, ஜி.எஸ்.டி., கவுன்­சில் முடிவு செய்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)