பதிவு செய்த நாள்
24 மே2017
23:43
ஐதராபாத் : வாகனங்களில் செல்வோர் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்த, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதை தவிர்க்க, மின்னணு தொழிற்நுட்பத்தில் செயல்படும், மின்னணு பட்டிகள் அறிமுகமாகி உள்ளன.
இந்த வகையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ‘பாஸ்டாக்’ என்ற மின்னணு பட்டியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதை, வாகனத்தின் முன்புறம் பொருத்தி, சோதனைச்சாவடியில் நுழையும் போது, சுங்கக் கட்டணம், உரிமையாளரின் கணக்கில் இருந்து தன்னிச்சையாக கழித்துக் கொள்ளப்படும். பணப் பரிமாற்றம் இல்லாத இந்த நடைமுறையால், சுங்கச்சாவடிகளை கடக்க, நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை.
இது குறித்து, எஸ்.பி.ஐ., துணை நிர்வாக இயக்குனர் நீரஜ் வியாஸ் கூறியதாவது: எஸ்.பி.ஐ., வங்கி வாடிக்கையாளர்களுக்கு, 80 ஆயிரம் மின்னணு பட்டிகள் வழங்கப்பட்டு உள்ளன. தற்போது, கார் உரிமையாளர்களுக்கு, ‘பாஸ்டாக்’ அறிமுகப்படுத்தி உள்ளோம். நடப்பு நிதியாண்டிற்குள், 10 லட்சம் பட்டிகளை வழங்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|