பதிவு செய்த நாள்
24 மே2017
23:45
புதுடில்லி : பேங்க் ஆப் பரோடா மற்றும் உரக் கூட்டுறவு அமைப்பான, ஐ.எப்.எப்.சி.ஓ., ஆகியவை இணைந்து, விவசாயிகளுக்கு டெபிட் கார்டு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளன.
இத்திட்டத்தின் மூலம், விவசாயிகள், ஆதார் கார்டுடன், 100 ரூபாய் டிபாசிட் செலுத்தி, பரோடா ஐ.எப்.எப்.சி.ஓ., கிரிஷி சேமிப்பு கணக்கை துவக்கலாம். இதற்கு, குறைந்தபட்ச இருப்பு இருக்க வேண்டிய அவசியமில்லை. இத்துடன், விவசாயிகளுக்கு, ‘ஓவர் டிராப்ட்’ எனப்படும், கூடுதல் பற்று வசதியும் வழங்கப்படுகிறது. இதன் மூலம், அதிகபட்சம் 2,500 ரூபாய் பெறலாம். இத்தொகைக்கு, முதல் மாதம் வட்டி கிடையாது. அதன்பின், 8.60 சதவீத ஆண்டு வட்டி செலுத்த வேண்டும்.
கணக்கு துவங்கிய பின், டெபிட் கார்டு வழங்கப்படும். இதை பயன்படுத்தி, ஐ.எப்.எப்.சி.ஓ., விற்பனை மையத்தில், பல்வேறு வேளாண் பொருட்களை வாங்கலாம். இந்த திட்டத்தின் மூலம், ஏராளமான விவசாயிகள், ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனையை அதிகம் மேற்கொள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|