பதிவு செய்த நாள்
25 மே2017
16:24
மும்பை : கடந்த சில நாட்களுக்கு முன் 30,000 புள்ளிகளை கடந்த பங்குச்சந்தை வரலாற்றில் புதிய சாதனை படைத்த சென்செக்சும், 9000 புள்ளிகளை கடந்த நிப்டியும், தற்போது அடுத்த சாதனைக்கு தயாராகி வருகின்றன.
இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள், பிற்பகலில் புதிய உச்சத்தை எட்டின. வர்த்தக நேர முடிவில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 448.39 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 30,750.03 புள்ளிகளாகவும், நிப்டி 140.95 புள்ளிகள் உயர்ந்து 9501.50 புள்ளிகளாகவும் உள்ளன.
சென்செக்ஸ் 31,000 புள்ளிகளை நெருங்கி வருவதும், நிப்டி 9500 புள்ளிகளை கடந்துள்ளதும் முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. வங்கித்துறை மற்றும் முக்கிய துறைகளின் பங்குகள் உயர்ந்ததே பங்குச்சந்தைகளின் இந்த அதிரடி உயர்விற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|