பதிவு செய்த நாள்
26 மே2017
11:22
மும்பை : இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக சென்செக்ஸ் 30,800 புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்து வருவதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகின்றன.
ஜூன் மாத முதலீடுகளும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், பங்குச்சந்தைகள் தொடர் உயர்வை சந்தித்து வருகின்றன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (மே 26, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 133.86 புள்ளிகள் உயர்ந்து 30,883.89 புள்ளிகளாகவும், நிப்டி 33.10 புள்ளிகள் அதிகரித்து 9542.85 புள்ளிகளாகவும் உள்ளன.
டாடா ஸ்டீல்.ஏசியன் பெயின்ட்ஸ், பார்தி ஏர்டெல், ஐடிசி, லுபின், அதானி போட்ஸ், விப்ரோ, கோல் இந்தியா, மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட உலோக மற்றும் ஆட்டோ துறை பங்குகள் உயர்வே இந்திய பங்குச்சந்தைகளின் அதிரடி உயர்விற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|