தினமும் 4 ஜிபி டேட்டா : இது பிஎஸ்என்எல்.,ன் அதிரடிதினமும் 4 ஜிபி டேட்டா : இது பிஎஸ்என்எல்.,ன் அதிரடி ... இனி புது வீடு வாங்கினால் 12 % வரி இனி புது வீடு வாங்கினால் 12 % வரி ...
ஒலிம்பிக்ஸ் - மெக்டொனால்ட்ஸ் 50 ஆண்டுகால உறவு நிறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2017
15:06

வாஷிங்டன் : ஒலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டிகளுக்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்பான்சர்ஷிப் வழங்கிவந்த மெக்டொனால்ட்ஸ் நிறுவனம், தங்களது முடிவை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம், ஒலிம்பிக்ஸ் - மெக்டொனால்ட்ஸ் இடையேயான 50 ஆண்டு கால உறவு விரைவில் நிறைவடைய உள்ளது.

1968ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் கிரீனோபிள் நகரத்தில் நடந்த குளிர்கால விளையாட்டு போட்டிகளின்போது, ஒலிம்பிக்ஸ்- மெக்டொனாலட்ஸ் உறவு துவங்கியது. 1976ம் ஆண்டில் அமெரிக்க கமிட்டியினரால், ஒலிம்பிக்ஸின் அதிகாரப்பூர்வ ஸ்பான்ஷராக மெக்டொனால்ட்ஸ் அறிவிக்கப்பட்டது. அன்று முதல், அமெரிக்காவில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிப்பது மற்றும் அமெரிக்க விளையாட்டு நட்சத்திரங்களை ஊக்குவிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

1984ம் ஆண்டில், மெக்டொனால்ட்ஸ் நிறுவனம், தனது புரோமோஷனல் வாசகத்தில் "எப்போது அமெரிக்கா வெற்றி பெறுகிறேதோ, அப்போதே நீயும் வெற்றி பெற்றவனாகிறாய்" என்று அமெரிக்காவை ஊக்குவிக்கும் விதங்களிலேயே செயல்பட்டு வந்தது.

இதனிடையே, வரும் 2018ம் ஆண்டில் தென்கொரியாவின் பியாங்சாங் நகரத்தில் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற உள்ளன. அங்கு ஒலிம்பிக் அடிப்படையிலான மெக்டொனால்ட் விளம்பரங்கள் வைக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஒலிம்பிக் உடனான 50 ஆண்டுகால நட்பை நிறைவுசெய்ய உள்ளதாக மெக்டொனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 2020ம் ஆண்டுவாக்கில், இந்த நட்புறவு நிறைவடைய வாய்ப்புள்ளதாக துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)