பதிவு செய்த நாள்
18 ஜூன்2017
05:19
பெங்களூரு : ஸ்மார்ட் போன் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள, சீனாவைச் சேர்ந்த, ஹூவேய் நிறுவனம், இந்தியாவில், நடப்பு நிதியாண்டில், இரு மடங்கு விற்பனையை எதிர்பார்ப்பதாக தெரிவித்து உள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் இந்திய பிரிவின் தயாரிப்பு மையத்தின் இயக்குனர் அலேன் வாங் கூறியதாவது:எங்கள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களுக்கு, கர்நாடகாவில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. நிறுவனத்திற்கு மிக முக்கிய சந்தையாக, கர்நாடகா திகழ்கிறது.மொத்த விற்பனையில், கிட்டத்தட்ட, 10 சதவீத விற்பனை இங்கு நடைபெறுகிறது. மேலும், மாநிலத்தில், 206க்கும் மேற்பட்ட சில்லரை விற்பனை கடைகள் உள்ளன. நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், இந்தியாவில், விற்பனையை இரு மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம்.தென் இந்திய பிராந்தியத்தில் எங்கள் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளோம். நிறுவனத்தின், ‘ஹானர் 8 புரோ’ ஸ்மார்ட் போன், இந்தியாவில், விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|