பதிவு செய்த நாள்
24 ஜூன்2017
00:21
மும்பை : பூஷன் ஸ்டீல், எஸ்ஸார் ஸ்டீல், எலக்ட்ரோ ஸ்டீல் ஆகிய மூன்று நிறுவனங்கள் மீது, திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து, வாராக்கடனை வசூலிக்க, வங்கிகள் முடிவு செய்துள்ளன.
பூஷன் ஸ்டீல் நிறுவனத்தின் வாராக்கடன், 44,478 கோடி ரூபாய்; எஸ்ஸார் ஸ்டீல், 37,284 கோடி ரூபாய்; எலக்ட்ரோ ஸ்டீல், 10,273.60 கோடி ரூபாயாக உள்ளது. வங்கிகளின் பரிந்துரையின் பேரில், தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், இந்த மூன்று நிறுவனங்களிடம், திவால் சட்டத்தில் கடன்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்கும். அதற்கு முன், இக்கடன்களை சீரமைக்க, நிறுவனங்களுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கப்படும். தேவைப்பட்டால், கூடுதலாக, மூன்று மாத அவகாசத்தை நிறுவனங்கள் பெறலாம்.
அதன் பின்னும், அந்நிறுவனங்களால் கடன் பிரச்னைக்கு தீர்வு காண முடியாவிட்டால், அவற்றின் சொத்துகளை விற்பனை செய்து, கடன் தொகையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.வங்கிகளின் மொத்த வாராக்கடனில், 5,000 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட, 12 நிறுவனங்களில், முதற்கட்டமாக, மூன்று நிறுவனங்கள் மீது, திவால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|