பதிவு செய்த நாள்
25 ஜூன்2017
06:05
மும்பை : ‘இந்தியாவில், அடுத்த நான்கு ஆண்டுகளில், குறைந்த விலை வீட்டு கடன் துறை, 6 லட்சம் கோடி ரூபாயாக உயரும்’ என, இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:வீட்டுவசதி கடன் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, மிகப்பெரிய பங்களிப்பை, குறைந்த விலை வீடுகள் பிரிவு வழங்கும். இப்பிரிவில், வீட்டு வசதி கடன் நிறுவனங்கள், அதிகபட்சம், 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குகின்றன.அடுத்த ஐந்து ஆண்டுகளில், வீட்டுவசதி கடன் நிறுவனங்களின் வணிகத்தில், குறைந்த விலை வீட்டு கடன் பிரிவு, மிகப்பெரிய வளர்ச்சியை எட்டிப் பிடிக்கும். இப்பிரிவின் சந்தை பங்களிப்பு, 2022ல், 37 சதவீதமாக உயரும். தற்போது, வீட்டுவசதி கடன் நிறுவனங்கள், 1.50 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, குறைந்த விலை வீடுகளுக்கு கடன் வழங்கி உள்ளன. இது, 2022ல், 6 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.இதே காலத்தில், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினருக்கான வீடுகளின் தேவை, 2.50 கோடியாக அதிகரிக்கும் என, தெரிகிறது. இது, இப்பிரிவில், தற்போதைய வீட்டுவசதி கடனுடன் ஒப்பிடும் போது, நான்கு மடங்கு அதிகம்.மதிப்பீட்டு ஆண்டுகளில், வீட்டுவசதி கடன் துறையில், 20 கோடி டாலர் அளவிற்கு பங்கு முதலீடு மேற்கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
என்ன காரணம்?மத்திய, மாநில அரசுகளின் நிதி மற்றும் கொள்கை திட்டங்கள், ஒழுங்குமுறை ஆணையங்களின் ஆதரவு, பெருகி வரும் நகர்ப்புறங்கள், கூட்டுக் குடும்பங்கள் குறைந்து வருவது, மக்களின் பொருளாதார ஏற்றம் போன்ற பல காரணங்களால், குறைந்த விலை வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|