பதிவு செய்த நாள்
26 ஜூன்2017
07:21
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி சரிவில் முடிவடைந்தது. கடந்த மூன்று வாரங்களாக வர்த்தகம், 9,710 முதல், 9,565 வரை என சீரான நிலையில் காணப்பட்டது. இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறையாகும். இந்த வாரம் ஜி.எஸ்.டி., அமல்படுத்திய பின் உண்டாகும் மாற்றங்கள் பங்குகளின் போக்கை தீர்மானிக்கும். வரும் வெள்ளி நள்ளிரவு அதிகாரப்பூர்வமாக புதிய வரிவிதிப்பு அமல்படுத்தப்படும். மேலும் வியாழன் அன்று எப் அண்டு ஓ., ஜூன் செட்டில்மென்ட் விலை மாற்றத்தை உண்டாக்கும்.
நடப்பு காலண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் ஜி.எஸ்.டி., குறித்த தெளிவின்மை காரணமாக மொத்த வியாபாரம் மற்றும் சரக்கு இருப்பு, சில்லரை வர்த்தகம் சிறிது குறைந்துள்ளது. இதன் காரணமாக இத்துறை சார்ந்த பங்குகளின் நிதி அறிக்கையில் மாற்றம் ஏற்படும். இதுவும் சந்தை பங்குகளின் விலை போக்கை தீர்மானிக்கும்.இந்திய பிரதமரின் அமெரிக்க பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எச்1பி விசா குறித்துள்ள விவாதம் மற்றும் அதில் வரும் மாற்றம் ஐ.டி., பங்குகளின் போக்கை நிர்ணயிக்கும். கச்சா எண்ணெய் விலை கடந்த, 10 மாத அளவை விட குறைவாகும். இதனால் பலதுறை நிறுவன பங்குகள் சாதகமாக வர்த்தகமாகிறது. அமெரிக்க எண்ணெய் உற்பத்தி பெருகியது மற்றும் ஒபெக் உற்பத்தி குறைப்பு சரிவர அமல்படுத்தப்படாதது இதற்கு காரணமாகும். இந்தியா அதிகளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாகும். இவ்விலை குறைவால் பணவீக்க விகிதம் குறைய வாய்ப்புள்ளது.
கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உபயோகிக்கும் நிறுவனங்கள் பயனடையும். டயர், பெயின்ட், விமான போக்குவரத்து, வாகன போக்குவரத்து, உரங்கள் மற்றும் கெமிக்கல் நிறுவனங்கள் இதில் அடங்கும். வரும் வியாழன் அன்று அமெரிக்காவின் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி, அறிவிப்பு வெளிவர உள்ளது. இச்சூழலில் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிப்டியின் அடுத்த சப்போர்ட் 9,460 மற்றும் ரெசிஸ்டென்ஸ் 9,700 ஆகும்.
கவனிக்க வேண்டிய பங்குகள்ஸ்நோமேன் லாஜிஸ்டிக் ஆதித்ய பிர்லா பேஷன்ஸ் மணப்புரம்
ஓரியன்ட் சிமென்ட் தவாட் (எல் அண்டு புட்ஸ் லிமிடெட்)
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|