சிறு­தொ­ழில்­க­ளுக்கு ரொக்­க­மில்லா பரி­வர்த்­தனைசிறு­தொ­ழில்­க­ளுக்கு ரொக்­க­மில்லா பரி­வர்த்­தனை ... மலேஷியாவின் கியோடா நிறுவனம் இந்தியாவில் ஸ்டோர்களை அமைக்கிறது மலேஷியாவின் கியோடா நிறுவனம் இந்தியாவில் ஸ்டோர்களை அமைக்கிறது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கடன் தவணை விதிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2017
07:44

சொந்த வீடு, சொகுசு கார், கனவு விடு­முறை என, எல்­லா­வற்­றையும் கடன் வாங்கி நிறை­வேற்றிக் கொள்ள முடி­கி­றது. மேலும் தேவை எனில், தனி­நபர் கடன் வாங்­கலாம். கடன் அதி­க­மாகும் போது, திரும்பிச் செலுத்­து­வது சுமை­யா­கலாம். அதிலும், அள­வுக்கு அதி­க­மாக கடன் வாங்கி, மாதத்­த­வ­ணையே, சம்­ப­ளத்தில் பெரும் பகு­தியை விழுங்கும் நிலை இருந்தால், விழி பிதுங்­கலாம். எனவே மாதத்­த­வ­ணையின் அளவு எப்­போ­துமே, கைக்கு அடக்­க­மாக இருக்க வேண்டும். காப்­பீட்­டுக்­கான தொகையும் இதில் அடங்கும். மாதத்­த­வ­ணையை சமா­ளிக்­கும்­படி இருப்­ப­தற்­கான பொது­வான விதிகள் சில:

காப்­பீடு:
பலரும் காப்­பீட்­டையும், முத­லீட்­டையும் ஒன்­றாக குழப்பிக் கொண்டு, பாலி­சி­களை வாங்கி வைத்துக் கொள்­கின்­றனர். மேலும் வரி சேமிப்­பிற்­கா­கவும் பாலி­சி­களை வாங்­கு­வதால், பல பாலி­சி­களை வைத்­தி­ருக்கும் நிலை ஏற்­ப­டு­கி­றது. இவற்றின் பிரீ­மியம் மாதத்­தவணை சுமைைய அதி­க­ரிக்கும் என்­ப­தோடு, பண­வீக்­கத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால், பலனும் மோச­மாக இருக்கும். பொது­வாக காப்­பீட்டு பிரீ­மி­யங்­க­ளுக்­கான தொகை, வரு­மா­னத்தில், 8 சத­வீ­த­மாக இருந்தால் நல்­லது என்­கின்­றனர். அதற்கு மேல் இருந்தால், தேவை­யில்­லாத பாலி­சி­களை சரண்டர் செய்­வதை பரி­சீ­லிக்­கலாம்.

தனி­நபர் கடன்:
அவ­சரத் தேவை எனில், தனி­நபர் கடன் வாங்­கலாம். ஆடம்­பரத் தேவைக்கு, இந்த வகை கடனை நாடும் பழக்கம் பல­ருக்கு இருக்­கி­றது. தனி­நபர் கட­னுக்­கான வட்டி விகிதம் அதிகம் என்­பதால், கவனம் தேவை. அது மட்டும் அல்ல, மாதத்­த­வணை சுமை­யையும் அதி­க­மாக்கும். வல்­லு­னர்கள் கருத்­துப்­படி பார்த்தால், தனி­நபர் கடன் என்­பது, வரு­மா­னத்தின், 10 சத­வீ­தத்­திற்கும் மேல் இருக்கக் கூடாது. கிரெடிட் கார்டு கடனும் இதற்குள் அடங்கும். இந்த கடன்­களை முதலில் அடைப்­பது நல்­லது. விரை­வாக அடைப்­பது இன்னும் நல்­லது.

வாகன கடன்:
சொந்த வீடு வாங்­கு­வதை விட, இப்­போது சொந்­த­மாக கார் வாங்­கு­வது எளி­தாக இருக்­கி­றது. அதற்­கேற்ப வாகனக் கடன் வாங்­கு­வதும் எளி­தாக இருக்­கி­றது. ஆனால், வாகனக் கட­னுக்­கான மாதத்­த­வணை, வரு­மா­னத்தில், 15 சத­வீ­தத்­திற்குள் இருக்க வேண்டும் என்­கின்­றனர். கார் கடனை பொறுத்­த­வரை, 20 சத­வீத முன்­பணம் செலுத்த வேண்டும், நான்கு ஆண்­டு­க­ளுக்குள் அடைத்­து­விட வேண்டும். போக்­கு­வ­ரத்து செலவு வரு­மா­னத்தின், 10 சத­வீ­தத்­திற்குள் இருக்க வேண்டும் என்ற விதியும் சொல்­லப்­ப­டு­கி­றது.

வீட்­டுக்­கடன் :
சொந்த வீட்டு கனவை நிறை­வேற்றிக் கொள்ள, கடன் வாங்­கலாம் தப்­பில்லை. ஆனால், வீட்­டுக்­க­ட­னுக்­கான மாதத்­த­வணை வரு­மா­னத்தில், 40 சத­வீ­தத்­திற்கு மேல் இல்­லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்னும் குறை­வாக இருந்­தாலும் நல்­லது. மொத்­த­மாக பார்க்கும் போது, மாதத்­த­வ­ணைக்­கான தொகை, வரு­மா­னத்தில், 50 சத­வீ­தத்­திற்கும் மேல் போகாமல் இருக்க வேண்டும். அப்­படி மீறினால், நிச்­சயம் மாத பட்ஜெட் சுமை­யாகும். எனவே கடன் திட்­ட­மிடும் போது, இந்த விதி­களை நினைவில் கொள்ள வேண்டும். தற்­போ­துள்ள கடன் தவணை அதி­க­மாக இருந்தால், முதலில் அதை குறைக்கும் வழி­களை தேட வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)