பதிவு செய்த நாள்
03 ஜூலை2017
07:20
விரும்பியபடி செயல்படும் வகையில், செயல் திறனை வளர்த்துக் கொள்வதற்கான வழிகளை, ‘தி லிட்டில் புக் ஆப் புரடக்டிவிட்டி’ புத்தகத்தில், ஸ்காட் யங் விவரிக்கிறார்.
செயல் திறனை விரும்புவதற்கான காரணம் இருக்க வேண்டும். அதிக நேரமும், ஆற்றலும் இருந்தால் என்ன செய்வீர்கள் என, எழுதி வையுங்கள். இப்படி எண்ணங்களை எழுதி வைப்பது, செயல் திறனோடு இருப்பதற்கான ஊக்கத்தை அளிக்கும். நீங்கள் எழுதும் எண்ணங்களில், சில எளிதாக இருக்கலாம்; சிலவற்றுக்கு பயிற்சி தேவைப்படலாம்.
சோம்பலை வெல்ல, தினசரி அல்லது வாராந்திர இலக்கு முறை உதவும். ஒவ்வொரு வார இறுதியில், அடுத்த ஏழு நாட்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என, எழுதி வையுங்கள். ஒவ்வொரு நாள் முடிவிலும், இந்த பட்டியலில் உள்ள சிலவற்றை, வேறு பட்டியலுக்கு மாற்றுங்கள். இவை தான், உங்கள் தினசரி இலக்குகள். இவற்றை முடித்தவுடன், அன்றைய தினத்திற்கான செயல்கள் முடிந்தன. இந்த முறை எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பதற்கு பதிலாக, ஒவ்வொரு நாளும் முடிக்கக் கூடிய செயல்களை வகுத்துக் கொள்ள உதவுகிறது.
மலை போன்ற வேலையை தினசரி செயல்களாக பிரித்துக் கொள்வதன் மூலம், எல்லாவற்றையும் எளிதாக்குகிறது. தெளிவில்லாத பெரிய திட்டங்களே, செயல்களை தள்ளிப் போடுவதற்கான காரணமாக அமைகிறது. இதை சமாளிக்க, பெரிய திட்டத்தை செயல்படுத்தக் கூடிய சிறிய செயல்களாக பிரித்து கொள்ள வேண்டும். நீங்கள் செய்யாமல் தள்ளிப் போடும் செயல்கள் மற்றும் உங்களுக்கு பிடிக்காத செயல்களை, இப்படி சின்ன சின்ன செயல்களாக பிரித்து கொள்ளலாம்.
நீங்கள் செயல்களை தள்ளிப் போடுவதற்கான காரணம் சோம்பல் இல்லை, உங்களுக்குள் இருக்கும் ஆற்றல் மந்தமாக இருப்பது தான். 100 மீ., ஓட்டப் பந்தயத்தில் தீவிரமாக ஓடுவது போல, குறுகிய நேரத்திற்கு தீவிர கவனம் செலுத்தவும். காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் எனில், வழக்கத்தை விட, 10 நிமிடம் முன்னதாக கண் விழிக்கவும். விரைவில், இதுவே பழக்கமாகிவிடும்.
சுய ஒழுக்கத்தை பயிற்சி செய்யுங்கள். ஒரு செயலை நிறுத்திக் கொள்ள தோன்றினால், கூடுதலாக ஒரு, 10 நிமிடம் வேலை செய்யுங்கள். உங்கள் மனது வெவ்வேறு திட்டங்களை நோக்கி அலைப்பாய்ந்தால், ஒரு மாதம் குறிப்பிட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்த உறுதிக் கொள்ளுங்கள். உங்களுக்கு உற்சாகம் அளிக்கும் மந்திரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். செயல் திறனுடன் தொடர்புப்படுத்திக் கொள்ளக் கூடிய வாசகமாக, இது இருக்கலாம். உற்சாக பொன்மொழிகளை நாடலாம்.
கண்ணுக்குத் தெரியாத தடைகளை நீக்குங்கள். இலக்குகளின் பட்டியலை கையில் வைத்திருப்பது, மற்றவர்களிடம் இலக்குகளை சொல்லி வைப்பது மற்றும் எழுதி வைப்பது செயல்படுவதற்கான கிரியாஊக்கியாக அமையும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|