பதிவு செய்த நாள்
18 ஜூலை2017
11:02
ராமநாதபுரம்: உப்பின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், ராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கத்தில் உள்ள அரசு உப்பு கழகத்தில், 1 லட்சம் டன் உப்பு தேக்கமடைந்துள்ளது.
இது தொடர்பாக, அரசு உப்பு கழக மேலாளர் விஜயன் கூறியதாவது: இந்தாண்டு மழை இல்லாததால், உப்பு உற்பத்தி அதிகமாக உள்ளது. அரசு உப்பு கழகத்தில் மட்டும், 1 லட்சம் டன் உற்பத்தியான உப்பு விற்பனையாகாமல் உள்ளது. இங்கு உப்பு உற்பத்தி செய்யப்பட்டு, 1 டன், 950 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுத்தம் செய்யப்படாத உப்பு டன்னுக்கு, 450 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, 1 டன், 1,050 வரை விற்பனை செய்யப்பட்டது. இப்போது டன் ஒன்றுக்கு, 1,300 - 1,400 ரூபாய் வரை உப்பை விற்பனை செய்தால் மட்டுமே லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|