பதிவு செய்த நாள்
18 ஜூலை2017
17:25
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன். குறிப்பாக ஐடிசி., தொடர்பான பங்குகள் 13 சதவீதம் வீழ்ச்சி கண்டன.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனும், புதிய உச்சத்தையும் தொட்டு வந்த நிலையில் இன்று வர்த்தகம் துவங்கும்போதே சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிந்தது. குறிப்பாக சிகரெட் மற்றும் பீடிக்கு ஜிஎஸ்டி அதிகமாகியுள்ளதன் காரணமாக இன்றைய வர்த்தகம் சரிவை சந்தித்தன. மேலும் முதலீட்டாளர்களும் கடந்த காலங்களில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் காரணமாக, லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் இன்றைய வர்த்தகம் சரிவை சந்தித்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 364 புள்ளிகள் சரிந்து 31,710.99-ஆகவும், நிப்டி 89 புள்ளிகள் சரிந்து 9,827.15-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் ஐடிசி., நிறுவன பங்குகள் 13 சதவீதம் அளவுக்கு கடும் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|