20 கோடி பீச்சர்போன்களை விற்பனை செய்ய ஜியோ திட்டம்20 கோடி பீச்சர்போன்களை விற்பனை செய்ய ஜியோ திட்டம் ... கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனம் பங்கு வெளியீட்டில் களமிறங்குகிறது கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவனம் பங்கு வெளியீட்டில் களமிறங்குகிறது ...
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2017
08:23

நாங்­கள், பிளஸ் 2க்கு, ‘நீட்’ ​தேர்­விற்கு ​பயிற்சி வகுப்­பு­கள் ​தனி­யாக ​எடுத்து வரு­கி­றோம். மாண­வர்­க­ளுக்கு அளிக்­கக் கூடிய இந்த சேவைக்கு, ஜி.எஸ்.டி., உண்டா? நாங்­கள், ஜி.எஸ்.டி., பதிவு பெற வேண்­டுமா?– ஷியாம்​,​ பாலக்­காடுஜி.எஸ்.டி., சட்­டத்­தின்­படி, கல்வி நிறு­வ­னம் எனும் வரம்­பிற்­குள், நீங்­கள் வராத கார­ணத்­தால், உங்­க­ளு­டைய ஆண்­டின் மொத்த வழங்­கல்­கள், 20 லட்­சம் ரூபாயை தாண்­டும் போது, நீங்­கள் பதிவு பெற வேண்­டும். பதிவு பெற்ற பின், 18 சத­வீ­தம் வரி வசூல் செய்து, அர­சுக்கு செலுத்த வேண்­டும்.
நான், ‘​இன்­சூ­ரன்ஸ்’ துறை­யில் முக­வ­ராக உள்­ளேன். நான் பதிவு பெற வேண்­டுமா? ஆம் எனில், எத்­தனை சத­வீ­தம் வரி வசூல் செய்ய வேண்­டும்? – கோகு­ல­கி­ருஷ்­ணன், கொச்­சின்நீங்­கள், ​காப்­பீட்டு துறை­யில் முக­வ­ராக உள்ள கார­ணத்­தால், ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்­டிய அவ­சி­ய­மில்லை. உங்­க­ளு­டைய சேவை­யின் மதிப்­பிற்கு, ​இன்­சூ­ரன்ஸ் நிறு­வ­னம், ‘ரிவெர்ஸ் சார்ஜ்’ முறை­யில் வரி செலுத்த வேண்­டும். ​இத­னால், ​உங்­க­ளுக்கு எந்த பாதிப்­பும் இல்லை.
சார், நாங்­கள், ‘மைக்­ரே­ஷன்’ மூலம் பதிவை பெறும் போது, எஸ்.ஏ.சி., குறி­யீட்டை தாக்­கல் செய்ய மறந்து விட்­டோம். இப்­போது, அதில் மாற்­றம் செய்ய இய­லுமா?– புக­ழேந்தி, வாணி­யம்­பாடிஉங்­களின் பதி­வில், ‘ஆன்­லைன்’ மூலம் திருத்­தம் செய்து, எஸ்.ஏ.சி., குறி­யீ­டு­களை மாற்­றம் செய்து கொள்­ள­லாம்.
சார், ஜி.எஸ்.டி., சட்­டத்­தின்­படி, ‘ரிட்­டர்ன்’ படிவ தாக்­க­லின் தவணை தேதி­கள் குழப்­ப­மாக உள்­ளது. இதை சற்று விப­ர­மாக கூற­வும்.– ரவிச்­சந்­தி­ரன், சத்­தி­ய­மங்­க­லம்ஜி.எஸ்.டி., சட்­டத்­தின்­படி, ‘ரிட்­டர்ன்’ தாக்­கல் செய்­வ­தில், எந்த குழப்­ப­மும் இல்லை. பெரும்­பா­லா­னோ­ரின் சந்­தே­கம் இது­வாக இருப்­ப­தால், இதை பற்றி, சற்று விரி­வாக விளக்­க­ம­ளிக்­கி­றேன். கலவை வரி திட்­டத்தை தேர்வு செய்­யாத வணி­கர், பின்­வ­ரும் தேதி­களில், மாதாந்­திர ரிட்­டர்ன் தாக்­கல் செய்ய வேண்­டும்.
படி­வம் எண் தாக்­கல் செய்ய வேண்­டிய தேதி விப­ரங்­கள் அமைப்புஜி.எஸ்.டி.ஆர்., 1 அடுத்த மாதம், 10க்குள் விலைப் பட்­டி­யல் வாரி­யான விற்­பனை விப­ரங்­கள் விப­ரங்­கள் பதி­வேற்­றம் செய்ய வேண்­டும்ஜி.எஸ்.டி.ஆர்., 2 அடுத்த மாதம், 15க்குள் கொள்­மு­தல் விப­ரங்­கள் தானா­கவே விப­ரங்­கள் ‘ஆன்­லைன்’ மூலம் வந்­து­வி­டும்ஜி.எஸ்.டி.ஆர்., 3 அடுத்த மாதம், 20க்குள் மாதாந்­திர விற்­பனை மற்­றும் கொள்­மு­தல் விப­ரங்­கள் தானா­கவே விப­ரங்­கள் ‘ஆன்­லைன்’ மூலம் வந்­து­வி­டும்.‘காம்­போ­சி­ஷன்’ வணி­கர்­க­ளுக்கு:படி­வம் எண் தாக்­கல் செய்ய வேண்­டிய தேதி விப­ரங்­கள் அமைப்புஜி.எஸ்.டி.ஆர்., 4, 4 ஏ காலாண்­டுக்கு, அடுத்த மாதம், 18க்குள் காலாண்­டுக்கு கொள்­மு­தல் மற்­றும் விற்­பனை விப­ரங்­கள் பதி­வேற்­றம் செய்ய வேண்­டும்
அனைத்து ரிட்­டர்ன்­க­ளை­யும், ‘ஆன்­லைன்’ மூலம் தாக்­கல் செய்ய வேண்­டும்.ஜி.எஸ்.டி., புதிய சட்­டத்­திற்கு மக்­களை தயார் செய்து கொள்ள வேண்­டிய கார­ணத்­தால், ஜூலை – ஆக., மாதங்­களில் வழங்­கிய வழங்­கல்­க­ளுக்கு, விலைப் பட்­டி­யல் வாரி­யாக, ரிட்­டர்ன் தாக்­கல் செய்­வ­தற்கு பதி­லாக, எளி­மைப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­களை, ஜி.எஸ்.டி.ஆர்., 3(பி) எனும் படி­வத்­தில், முறையே, ஆக., மற்­றும் செப்., 20க்குள் தாக்­கல் செய்ய வேண்­டும். மேலே குறிப்­பிட்ட விலைப் பட்­டி­யல் வாரி­யான விப­ரங்­கள் அடங்­கிய, ஜி.எஸ்.டி.ஆர்., 1 எனும் படி­வத்தை, செப்., 5க்குள் (ஜூலை மாதத்­திற்­கான வழங்­கல்­கள்) மற்­றும் செப்., 20க்குள் (ஆக., மாதத்­திற்­கான வழங்­கல்­கள்) தாக்­கல் செய்ய வேண்­டும்.

‘ரிட்­டர்ன்’ தாக்­க­லின் போது, பதிவு செய்­யப்­பட்ட நபர், பதிவு செய்­யாத நுகர்­வோ­ரி­டம் செய்த விற்­ப­னை­யின் விப­ரங்­களை, விலைப் பட்­டி­யல் வாரி­யாக தெரி­விக்க வேண்­டுமா?– ஆனந்தி, கரூர்நுகர்­வோ­ருக்கு செய்­யும் விற்­ப­னை­யின் விப­ரங்­களை, விலைப் பட்­டி­யல் வாரி­யாக பதி­வேற்­றம் செய்ய வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இதுவே, வெளி மாநி­லத்­தில் உள்ள நுகர்­வோ­ருக்கு விற்­பனை செய்­யும் போது, ஒரு விலைப் பட்­டி­ய­லின் தொகை, 2.50 லட்­சம் ரூபாயை தாண்­டி­னால், அதன் விப­ரத்தை, ‘ரிட்­டர்ன்’ தாக்­க­லின் போது தெரி­விக்க வேண்­டும்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)