பதிவு செய்த நாள்
23 ஜூலை2017
01:44
புதுடில்லி : மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா, ராஜ்யசபாவில் கூறியதாவது:உள்நாட்டில், மொபைல் போன் தயாரிப்பு வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. 2016 –- 17ம் நிதியாண்டில், 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, மொபைல் போன்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.இது, 2015 – -16 மற்றும் 2014 – -15ம் நிதியாண்டுகளில், முறையே, 54 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் 18,900 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், மொபைல் போன் இறக்குமதி, 21 கோடியில் இருந்து, 14.6 கோடியாக குறைந்துள்ளது.இது, கடந்த நிதியாண்டில் மேலும் குறைந்து, 7.60 கோடியாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் மதிப்பு, 24,363 கோடி ரூபாய். உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த, முன்னணி மொபைல் போன் நிறுவனங்கள், அவற்றின் தொழிற்சாலைகளை, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அமைத்துள்ளன. ஒருசில நிறுவனங்கள், மொபைல் போன் உதிரி பாகங்களை பிற நிறுவனங்கள் மூலம் தயாரித்து, பெற்றுக் கொள்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|