பதிவு செய்த நாள்
28 ஜூலை2017
00:39
ஒரே, ‘பான்’ எண்ணை வைத்துக் கொண்டு, இரு வேறு வியாபாரத்தில் ஈடுபட்டு, இரு வேறு, ஜி.எஸ்.டி., எண்களை வைத்துக் கொள்ள இயலுமா?– சம்சுதீன், சங்ககிரிவைத்துக் கொள்ள முடியும். இரு வேறு வியாபாரம் செய்யும் நபர், ஒவ்வொன்றையும் தனித்தனியாக பதிவு பெற்று, வியாபாரங்களில் ஈடுபட முடியும். அத்தகைய விபரங்களை பதிவு பெறுவதற்கான விண்ணப்பமான, ஜி.எஸ்.டி., ஆர்.இ.ஜி., 1 எனும் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
பதிவு பெற்ற நபர், உரிய காலத்தில் மாதாந்திர ரிட்டர்ன் தாக்கல் செய்யவில்லை என்றால், அந்த விபரம் எவ்வாறு அரசுக்கு தெரிய வரும்?– தேவேந்திரன், துாத்துக்குடிஜி.எஸ்.டி., சட்டம், புதிய தொழிற்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, மின்னணு முறையில், மின்னணு கட்டமைப்பின் மூலம் இணைக்கப்பட்டு உள்ளது. எனவே, ‘ஆன்லைன்’ மூலம் தாக்கல் செய்ய வேண்டிய மாதாந்திர ரிட்டர்ன் படிவங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்றால், அது மின்னணு மூலம் உறுதி செய்யப்பட்டு, தாக்கல் செய்ய தவறிய நபர்களுக்கு, ஜி.எஸ்.டி.ஆர்., 3ஏ எனும் படிவம் மூலமான அறிவிப்பு, அரசால் வழங்கப்படும்.
சார், நாங்கள், ‘ஆடிட்டிங்’ துறையில் உள்ளோம். ‘கேள்விகள் ஆயிரம்’ பகுதி விளக்கமாகவும், தரமானதாகவும் உள்ளது. அதற்கு உங்களுக்கும், ‘தினமலர்’ நாளிதழுக்கும் நன்றி. நாங்கள் நிறுவன பதிவு செய்வதற்காக, எங்களது வாடிக்கையாளர்களிடமிருந்து, ஆர்.ஓ.சி.,க்கு செலுத்த வேண்டிய கட்டண தொகையை வசூல் செய்யும் போது, அதற்கும், ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்டுமா?– ஈஸ்வரன், கொச்சின்தங்களது மனமார்ந்த பாராட்டுகளுக்கு நன்றி. நீங்கள், மேலே குறிப்பிட்ட பரிவர்த்தனையானது, ‘பியூர் ஏஜன்ட்’ முறையில் வழங்கப்படும் சேவையாகும். இதனால், ஆர்.ஓ.சி.,க்கு செலுத்த வேண்டிய சரியான தொகையை, பதிவு பெறும் நபரிடம் இருந்து பெற்று, அதே தொகையை திரும்ப செலுத்தும் போது, அதற்கு எந்த ஒரு வரியும் விதிக்கப்பட மாட்டாது. சி.ஜி.எஸ்.டி., விதி எண், 33ன் கீழ், இதற்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
சார், எங்கள் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட பொருட் களை, ஜூன், 15ல், ஆந்திர மாநிலம், குப்பம் நகரில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பினோம். இப்போது, பரிசோதனை முடிந்து அதை திரும்ப பெறும் போது, ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டியதிருக்குமா?– ராமானுஜம், ராணிப்பேட்டைநீங்கள் அனுப்பிய பொருட்கள், ஜி.எஸ்.டி., அறிமுகமான, ஜூலை, 1லிருந்து, ஆறு மாதங்களுக்குள் திருப்பி வழங்கப்பட்டால் அதற்கு, ஜி.எஸ்.டி., சட்டப்படி, எந்த வரியுமில்லை. எனவே, நீங்கள் பொருட்களை திரும்ப பெறும் போது, எந்த வரியும் செலுத்த வேண்டாம்.
நாங்கள், ‘ஆர்டர்’ ஒன்றின் பேரில், அதில் குறிப்பிட்டுள்ளபடி, பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு வாரத்திற்குள் எங்கள் ஊரில் உள்ள வாடிக்கையாளருக்கு சப்ளை செய்கிறோம். ஒவ்வொரு வழங்கலிலும் விலைப் பட்டியல் தர வேண்டுமா அல்லது வார முடிவில் ஒரே விலைப் பட்டியல் வழங்கினால் போதுமானதா?– ரகுராமன், திருவாரூர்உங்களால், ஒவ்வொரு வழங்கலிலும் விலைப் பட்டியல் தர முடியவில்லை என்றால், ஆர்டருக்கான இறுதி சப்ளையின் போது, விலைப் பட்டியல் வழங்கலாம்.
பதிவு பெற்ற நபருக்கு, அரசு வழங்க வேண்டிய, ‘ரீபண்டு’ தொகையை உரிய தேதியில் அரசு வழங்க தவறினால், அத்தொகை வட்டியுடன் திரும்பத் தரப்படுமா?– ஜவஹர், பண்ருட்டி‘ரீபண்டு’ பெற விண்ணப்பித்த, 60 நாட்களுக்குள், அரசால் பணம் தரப்படவில்லை எனில், ‘ரீபண்டு’ தொகையுடன், 6 சதவீத வட்டியும் சேர்த்து பதிவு பெற்ற நபருக்கு வழங்கப்படும்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|