மாலைநேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வுமாலைநேர நிலவரம் : தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 உயர்வு ... கரன்சி நிலவரம் கரன்சி நிலவரம் ...
ஜி.எஸ்.டி., கேள்விகள் ஆயிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2017
00:39

ஒரே, ‘பான்’ எண்ணை வைத்­துக் கொண்டு​,​ இரு வேறு வியா­பா­ரத்­தில் ஈடு­பட்டு, இரு வேறு, ஜி.எஸ்.டி., எண்­களை வைத்­துக் கொள்ள இய­லுமா?– சம்­சு­தீன், சங்­க­கிரிவைத்­துக் கொள்ள முடி­யும். இரு வேறு வியா­பா­ரம் செய்­யும் நபர்​, ஒவ்­வொன்­றை­யும் தனித்­த­னி­யாக ​பதிவு ​பெற்று, வியா­பா­ரங்­களில் ஈடு­பட முடி­யும். அத்­த­கைய விப­ரங்­களை பதிவு பெறு­வ­தற்­கான விண்­ணப்­ப­மான, ஜி.எஸ்.டி., ஆர்.இ.ஜி., 1 எனும் படி­வத்­தில் குறிப்­பிட வேண்­டும்.
பதிவு பெற்ற நபர், உரிய காலத்­தில் மாதாந்­திர ரிட்­டர்ன் தாக்­கல் செய்­ய­வில்லை என்­றால், அந்த விப­ரம் எவ்­வாறு அர­சுக்கு தெரிய வரும்?– தேவேந்­தி­ரன், துாத்துக்­குடிஜி.எஸ்.டி., சட்­டம், புதிய தொழிற்­நுட்ப வளர்ச்­சிக்­கேற்ப, மின்­னணு முறை­யில்​,​ மின்­னணு கட்­ட­மைப்­பின் மூலம் இணைக்­கப்­பட்டு உள்­ளது. எனவே, ‘ஆன்­லைன்’ மூலம் தாக்­கல் செய்ய வேண்­டிய மாதாந்­திர ரிட்­டர்ன் படி­வங்­கள் தாக்­கல் செய்­யப்­ப­ட­வில்லை என்­றால்​,​ அது மின்­னணு மூலம் உறுதி செய்­யப்­பட்டு, தாக்­கல் செய்ய தவ­றிய நபர்­க­ளுக்கு, ஜி.எஸ்.டி.ஆர்., 3ஏ எனும் படி­வம் மூல­மான அறி­விப்பு, அர­சால் வழங்­கப்­படும்.
சார், நாங்­கள், ‘ஆடிட்­டிங்’ துறை­யில் உள்­ளோம். ‘கேள்­வி­கள் ஆயி­ரம்’ பகுதி விளக்­க­மா­க­வும், தர­மா­ன­தா­க­வும் உள்­ளது. அதற்கு உங்­க­ளுக்­கும், ‘தின­ம­லர்’ நாளி­த­ழுக்­கும் நன்றி. நாங்­கள் நிறு­வன பதிவு செய்­வ­தற்­காக, எங்­க­ளது வாடிக்­கை­யா­ளர்­க­ளி­ட­மி­ருந்து, ஆர்.ஓ.சி.,க்கு செலுத்த வேண்­டிய கட்­டண தொகையை வசூல் செய்­யும் போது, அதற்­கும், ஜி.எஸ்.டி., வசூல் செய்ய வேண்­டுமா?– ஈஸ்­வ­ரன், கொச்­சின்தங்­க­ளது மன­மார்ந்த பாராட்­டு­க­ளுக்கு நன்றி. நீங்­கள், மேலே குறிப்­பிட்ட பரி­வர்த்­த­னை­யா­னது, ‘பியூர் ஏஜன்ட்’ முறை­யில் வழங்­கப்­படும் சேவை­யா­கும். இத­னால், ஆர்.ஓ.சி.,க்கு செலுத்த வேண்­டிய சரி­யான தொகையை, பதிவு பெறும் நப­ரி­டம் இருந்து பெற்று, அதே தொகையை திரும்ப செலுத்­தும் போது, அதற்கு எந்த ஒரு வரி­யும் விதிக்­கப்­பட மாட்­டாது. சி.ஜி.எஸ்.டி., விதி எண், 33ன் கீழ், இதற்கு வரி­யி­லி­ருந்து ​விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது.
சார், எங்­கள் ​தொழிற்­சா­லை­யில் தயா­ரிக்­கப்­பட்ட ​பொருட் க​ளை, ​ஜூன், 15ல், ஆந்­திர மாநி­லம், குப்­பம் நக­ரில் உள்ள பரி­சோ­த­னை கூடத்­திற்கு அனுப்­பி­னோம். இப்­போது, பரி­சோ­தனை முடிந்து அதை திரும்ப பெறும் போது, ​​​​​ஜி.எஸ்.டி., செலுத்த வேண்­டி­ய­தி­ருக்­குமா?– ​ராமா­னு­ஜம், ராணிப்­பேட்டை​நீங்­கள் அனுப்­பிய பொருட்­கள், ​ஜி.எஸ்.டி., அறி­மு­க­மான, ஜூலை, 1லிருந்து, ஆறு மாதங்­க­ளுக்­குள்​ திருப்பி வழங்க​ப்பட்­டால் ​அதற்கு, ஜி.எஸ்.டி., ​சட்­டப்­படி, எந்த வரி­யு­மில்லை.​ எனவே, நீங்­கள் பொருட்­களை திரும்ப பெறும் போது, எந்த வரி­யும் செலுத்த வேண்­டாம்.
நாங்­கள், ‘ஆர்­டர்’ ஒன்­றின் பேரில், அதில் குறிப்­பிட்­டுள்­ள­படி, பொருட்­களை கொஞ்­சம் கொஞ்­ச­மாக, ஒரு வாரத்­திற்­குள் எங்­கள் ஊரில் உள்ள வாடிக்­கை­யா­ள­ருக்கு சப்ளை செய்­கி­றோம். ஒவ்­வொரு வழங்­க­லி­லும் விலைப் பட்­டி­யல் தர வேண்­டுமா அல்­லது வார முடி­வில் ஒரே விலைப் பட்­டி­யல் வழங்­கி­னால் போது­மா­னதா?– ரகு­ரா­மன், திரு­வா­ரூர்உங்­க­ளால், ஒவ்­வொரு வழங்­க­லி­லும் விலைப் பட்­டி­யல் தர முடி­ய­வில்லை என்­றால், ஆர்­ட­ருக்­கான இறுதி சப்­ளை­யின் போது, விலைப் பட்­டி­யல் வழங்­க­லாம்.
பதிவு பெற்ற நப­ருக்கு, அரசு வழங்க வேண்­டிய, ‘ரீபண்டு’ தொகையை உரிய தேதி­யில் அரசு வழங்க தவ­றி­னால்​,​ அத்­தொகை வட்­டி­யு­டன் திரும்­பத் தரப்­ப­டுமா?– ஜவ­ஹர், பண்­ருட்டி‘ரீபண்டு’ பெற விண்­ணப்­பித்த, 60 நாட்­க­ளுக்­குள், அர­சால்​​ ​பணம் ​தரப்­ப­ட­வில்லை எனில், ‘ரீபண்டு’ தொகை­யு­டன், 6 சத­வீத வட்­டி­யும் சேர்த்து பதிவு பெற்ற நப­ருக்கு வழங்­கப்­படும்.
-ஜி.சேகர், எப்.சி.ஏ., ஆடிட்டர்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)