பதிவு செய்த நாள்
28 ஜூலை2017
00:46
பெங்களூரு : மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம், பெரிய குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் உள்வட்ட தகவல் பரிவர்த்தனைகளுக்கு, ‘கைசாலா’ மற்றும் ‘கைசாலா புரோ’ என்ற இரண்டு, ‘மொபைல் போன் ஆப்’களை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஆண்ட்ராய்டு இயக்கத் தொகுப்பில் இயங்கும், ‘கைசாலா ஆப்’பை, இலவசமாக, மொபைல் போனில் பதிவிறக்கி கொள்ளலாம். இந்த ஆப், நிறுவனங்கள் இடையிலான தகவல்கள், படங்கள் உள்ளிட்டவற்றை பரிமாறிக் கொள்ள உதவும். பணியாளர்கள் வெளியில் இருந்தாலும், மொபைல் போன் அல்லது மேசை கணினியை பயன்படுத்தினாலும், பணிகளை அளித்து பெற்றுக் கொள்ள துணை புரியும்.
ஒரு நிறுவனம், அதன் பணியாளர்கள் வாயிலான, நிர்வாக நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்ள, ‘கைசாலா புரோ ஆப்’ உதவுகிறது. இதற்கு, மாதாந்திர கட்டணமாக, ஒருவருக்கு, 130 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நிறுவனப் பணிகளை எங்கிருந்தும், எந்நேரத்திலும் செய்யவும், ஒருங்கிணைந்த தகவல் பரிமாற்றத்திற்கும், இந்த மொபைல் போன் ஆப்கள் உதவும் என, மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. ஆந்திர அரசு, அனைத்து துறைகளின் நிர்வாகப் பணிகளுக்கு, ஏற்கனவே, ‘கைசாலா ஆப்’ பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|