3 ஆண்டுகளில் 50 புதிய எஸ்.இ.இசட்., அமைப்பு3 ஆண்டுகளில் 50 புதிய எஸ்.இ.இசட்., அமைப்பு ... வீட்டுவசதி கடனுக்கு வட்டி குறையும்; கட்டுமான நிறுவனங்கள் நம்பிக்கை வீட்டுவசதி கடனுக்கு வட்டி குறையும்; கட்டுமான நிறுவனங்கள் நம்பிக்கை ...
‘உணவு பூங்கா அமைத்தால் ரூ.10 கோடி நிதி உதவி’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2017
02:30

சென்னை : ‘‘தமி­ழக சிறு விவ­சா­யி­கள், ஐந்து பேர் சேர்ந்து, சிறிய உண­வுப் பூங்கா அமைக்க முன்­வந்­தால், 10 கோடி ரூபாய் நிதி­உதவி அளிக்­கப்­படும்’’ என, மத்­திய உணவு பத­னி­டும் துறை அமைச்­சர் ஹர்­சிம்­ரத் கவுர் தெரி­வித்­தார்.

டில்­லி­யில் நவம்­ப­ரில் நடை­பெ­ற­வுள்ள, உலக உணவு விழா தொடர்­பான விளம்­பர நிகழ்ச்சி, சென்­னை­யில் நேற்று நடந்­தது. அதில் அவர் கூறியதாவது: இந்­தி­யா­வில், சில்­லரை விற்­பனை சந்தை, 60 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­விற்கு உள்­ளது. அதில், 70 சத­வீ­தம், உண­வுப் பொருட்­கள் ஆகும். இதை பயன்­ப­டுத்த உலக நாடு­கள் காத்­தி­ருக்­கின்றன. அதற்­காக, நவ., 3 – 5 வரை, டில்­லி­யில் உலக உணவு விழா நடக்­கிறது.

வாய்ப்பு:
அதில், தமி­ழக விவ­சா­யி­கள், வேளாண் தொழில் முனை­வோர் ஆகி­யோர் பங்­கேற்று, வாய்ப்பை பயன்­ப­டுத்­திக் கொள்­ளுங்­கள். உல­கில் உண­வுப் பொருள் உற்­பத்­தி­யில் இந்­தியா சிறந்து விளங்­கி­னா­லும், அதில், 10 சத­வீ­தம் மட்­டுமே பத­னி­டும் துறைக்கு செல்­கிறது. ஆனால், இந்­தோ­னே­ஷியா போன்ற சிறிய நாடு­களில், அது, 60 சத­வீ­த­மாக உள்­ளது. நம் நாட்­டில் போதிய கட்­ட­மைப்பு வச­தி­கள் இல்­லா­ததே இதற்கு கார­ணம். இதற்­காக, நாடு முழு­வ­தும், 42 இடங்­களில், ‘மெகா புட் பார்க் ’ எனும் உணவு பத­னி­டும் ஆலை­கள் பூங்கா அமைக்­கப்­படுகின்றன.

மானியம்:
அதில், ஒன்­பது பூங்­கா­வுக்­கான பணி­கள் முடிந்­து­விட்­டன. உண­வுப் பூங்­கா­வில், ஆலை அமைத்­தால், 5 கோடி ரூபாய் மானி­யம் தரப்­படும். தமி­ழ­கத்­தில், கோவை­யில் அது அமைக்­கப்­ப­டு­கிறது. இது தவிர, ஐந்து, சிறு விவ­சா­யி­கள் சேர்ந்து, கூட்­டாக சிறிய உணவு பூங்கா அமைக்க முன்­வந்­தால், அதற்கு, 10 கோடி ரூபாய் நிதி­யு­தவி தரப்­படும். இவ்­வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்­சி­யில், தமி­ழக வேளாண் அமைச்­சர் துரைக்­கண்ணு, செய­லா­ளர் ககன் தீப் சிங் பேடி, இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்­புக்கு தலை­வ­ராக பத­வி­யேற்க உள்ள, ராகேஷ் பார்தி மிட்­டல் உள்­ளிட்­டோர் பேசி­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)