பதிவு செய்த நாள்
04 ஆக2017
02:30
சென்னை : ‘‘தமிழக சிறு விவசாயிகள், ஐந்து பேர் சேர்ந்து, சிறிய உணவுப் பூங்கா அமைக்க முன்வந்தால், 10 கோடி ரூபாய் நிதிஉதவி அளிக்கப்படும்’’ என, மத்திய உணவு பதனிடும் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் தெரிவித்தார்.
டில்லியில் நவம்பரில் நடைபெறவுள்ள, உலக உணவு விழா தொடர்பான விளம்பர நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. அதில் அவர் கூறியதாவது: இந்தியாவில், சில்லரை விற்பனை சந்தை, 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உள்ளது. அதில், 70 சதவீதம், உணவுப் பொருட்கள் ஆகும். இதை பயன்படுத்த உலக நாடுகள் காத்திருக்கின்றன. அதற்காக, நவ., 3 – 5 வரை, டில்லியில் உலக உணவு விழா நடக்கிறது.
வாய்ப்பு:
அதில், தமிழக விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோர் ஆகியோர் பங்கேற்று, வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உலகில் உணவுப் பொருள் உற்பத்தியில் இந்தியா சிறந்து விளங்கினாலும், அதில், 10 சதவீதம் மட்டுமே பதனிடும் துறைக்கு செல்கிறது. ஆனால், இந்தோனேஷியா போன்ற சிறிய நாடுகளில், அது, 60 சதவீதமாக உள்ளது. நம் நாட்டில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததே இதற்கு காரணம். இதற்காக, நாடு முழுவதும், 42 இடங்களில், ‘மெகா புட் பார்க் ’ எனும் உணவு பதனிடும் ஆலைகள் பூங்கா அமைக்கப்படுகின்றன.
மானியம்:
அதில், ஒன்பது பூங்காவுக்கான பணிகள் முடிந்துவிட்டன. உணவுப் பூங்காவில், ஆலை அமைத்தால், 5 கோடி ரூபாய் மானியம் தரப்படும். தமிழகத்தில், கோவையில் அது அமைக்கப்படுகிறது. இது தவிர, ஐந்து, சிறு விவசாயிகள் சேர்ந்து, கூட்டாக சிறிய உணவு பூங்கா அமைக்க முன்வந்தால், அதற்கு, 10 கோடி ரூபாய் நிதியுதவி தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, செயலாளர் ககன் தீப் சிங் பேடி, இந்திய தொழிலக கூட்டமைப்புக்கு தலைவராக பதவியேற்க உள்ள, ராகேஷ் பார்தி மிட்டல் உள்ளிட்டோர் பேசினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|