பதிவு செய்த நாள்
04 ஆக2017
09:54
மும்பை : அமெரிக்க அரசு அறிவித்து வரும் அதிரடி கட்டுப்பாடுகளால் அந்நாட்டு பொருளாதாரத்தில் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்களும், வங்கிகளும் அமெரிக்க டாலரை அதிகம் விற்பனை செய்து வருகின்றனர்.
அதே சமயம் இந்திய பங்குச்சந்தைகளில் காணப்படும் உயர்வின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்க துவங்கி உள்ளன. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உயர்ந்து 63 என்ற நிலையை எட்டி உள்ளது.
இன்றைய (ஆக.,04) வர்த்தக நேர துவக்கத்தின் போது டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து 63.60 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 63.69 ஆக இருந்தது. இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கிய போதிலும் ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|