பதிவு செய்த நாள்
21 ஆக2017
05:25
இந்திய பங்குச் சந்தைகளான, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகியவற்றின் குறியீடுகளான, சென்செக்ஸ் மற்றும் நிப்டியில், கடந்த வாரம் வியாபாரம் சரிவில் முடிவடைந்தது. தொடர் எட்டு மாத உயர்விற்கு பிறகு, இந்த மாதம் இதுவரை சந்தை சரிவில் உள்ளது.இந்த சரிவிற்கு, உயர்ந்து வரும் பணவீக்க விகிதம் மற்றும் இந்திய தொழிற்சாலை உற்பத்தி குறியீடு கடந்த இரு ஆண்டுகளை விட குறைந்து போனது காரணமாக அமைந்தது.முன்னணி நிறுவனங்களின் முதல் காலாண்டு அறிக்கைகளை பொறுத்தவரை, முதல் பகுதியில் வெளியானவை, சந்தைக்கு சாதகமாக அமைந்தன. ஆனால், இரண்டாம் பகுதியில் வெளிவந்தவை, சந்தைக்கு சாதகமாக அமையவில்லை. இதனால், சந்தையில் சரிவு ஏற்பட்டது. மேலும், பல நிறுவன பங்குகள், அதிக மதிப்பில் இருந்ததால், இந்த தற்காலிக சரிவு நிகழ்ந்தது.பணவீக்க விகிதம், வரும் மாதங்களில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச் சூழலில், சந்தைக்கு சாதகமாக உள்ளது என்னவெனில், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களில், 35 ஆயிரம் கோடி ரூபாய் கையிருப்பு உள்ளதும், ஒவ்வொரு மாதமும், 5,000 கோடி ரூபாய், எஸ்.ஐ.பி., முறையில், பரஸ்பர நிதி மூலமாக முதலீடு செய்யப்படுவதும் ஆகும்.இந்த மாதம், இதுவரை உள்ள நிலவரப்படி, அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், கடைசி ஒன்பது நாட்களில், 7,600 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள், 9,300 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளன. வரும் நாட்களிலும் சந்தையின் போக்கு அன்னிய நிறுவன முதலீட்டை பொறுத்தே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.சர்வதேச சந்தையை பொறுத்தவரை, அமெரிக்க பங்குச் சந்தை குறியீடான டவ்ஜோன்ஸ் இருமுறை இறக்கம் கண்டது. அமெரிக்க அதிபரின் புதிய பொருளாதார கொள்கைகள் எவ்வாறு அமையும் மற்றும் அதன் பலன்கள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்த சந்தேகங்கள், சந்தையில் சரிவை ஏற்படுத்தின.இந்த வாரம், நிப்டி ரெசிஸ்டென்ஸ், 9,950 ஆகும். இதை கடக்கும் நிலையில், 10,100 அடுத்த இலக்காகும்.சப்போர்ட் 9,680 மற்றும் 9,570 ஆக அமையும்.
கவனிக்க வேண்டிய பங்குகள்மெஹமானி ஆர்கானிக்ஸ், கிரான்யூல்ஸ், ஜெய் கார்ப், ஆதித்ய பிர்லா பேஷன், முஞ்சால் ஆட்டோ
முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|