நியாயமற்ற சந்தைப்படுத்தும் முறைக்கு கடிவாளம் மருந்து விலையை குறைக்க நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு அமைக்க முடிவுநியாயமற்ற சந்தைப்படுத்தும் முறைக்கு கடிவாளம் மருந்து விலையை குறைக்க ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.05 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.05 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தை நிலவரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2017
05:25

இந்­திய பங்­குச் சந்­தை­க­ளான, மும்பை மற்­றும் தேசிய பங்­குச் சந்தை ஆகி­ய­வற்­றின் குறி­யீ­டு­க­ளான, சென்­செக்ஸ் மற்­றும் நிப்­டி­யில், கடந்த வாரம் வியா­பா­ரம் சரி­வில் முடி­வ­டைந்­தது. தொடர் எட்டு மாத உயர்­விற்கு பிறகு, இந்த மாதம் இது­வரை சந்தை சரி­வில் உள்­ளது.இந்த சரி­விற்கு, உயர்ந்து வரும் பண­வீக்க விகி­தம் மற்­றும் இந்­திய தொழிற்­சாலை உற்­பத்தி குறி­யீடு கடந்த இரு ஆண்­டு­களை விட குறைந்து போனது கார­ண­மாக அமைந்­தது.முன்­னணி நிறு­வ­னங்­களின் முதல் காலாண்டு அறிக்­கை­களை பொறுத்­த­வரை, முதல் பகு­தி­யில் வெளி­யா­னவை, சந்­தைக்கு சாத­க­மாக அமைந்­தன. ஆனால், இரண்­டாம் பகு­தி­யில் வெளி­வந்­தவை, சந்­தைக்கு சாத­க­மாக அமை­ய­வில்லை. இத­னால், சந்­தை­யில் சரிவு ஏற்­பட்­டது. மேலும், பல நிறு­வன பங்­கு­கள், அதிக மதிப்­பில் இருந்­த­தால், இந்த தற்­கா­லிக சரிவு நிகழ்ந்­தது.பண­வீக்க விகி­தம், வரும் மாதங்­களில் உய­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இச் சூழ­லில், சந்­தைக்கு சாத­க­மாக உள்­ளது என்­ன­வெ­னில், உள்­நாட்டு முத­லீட்டு நிறு­வ­னங்­களில், 35 ஆயி­ரம் கோடி ரூபாய் கையி­ருப்பு உள்­ள­தும், ஒவ்­வொரு மாத­மும், 5,000 கோடி ரூபாய், எஸ்.ஐ.பி., முறை­யில், பரஸ்­பர நிதி மூல­மாக முத­லீடு செய்­யப்­ப­டு­வ­தும் ஆகும்.இந்த மாதம், இது­வரை உள்ள நில­வ­ரப்­படி, அன்­னிய நிறு­வன முத­லீட்­டா­ளர்­கள், கடைசி ஒன்பது நாட்­களில், 7,600 கோடி ரூபாய்க்கு விற்­பனை செய்­துள்­ள­னர். உள்­நாட்டு முத­லீட்டு நிறு­வ­னங்­கள், 9,300 கோடி ரூபாய்க்கு கொள்­மு­தல் செய்­துள்ளன. வரும் நாட்­க­ளி­லும் சந்­தை­யின் போக்கு அன்­னிய நிறு­வன முத­லீட்டை பொறுத்தே அமை­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.சர்­வ­தேச சந்­தையை பொறுத்­த­வரை, அமெ­ரிக்க பங்­குச் சந்தை குறி­யீ­டான டவ்­ஜோன்ஸ் இரு­முறை இறக்­கம் கண்­டது. அமெ­ரிக்க அதி­ப­ரின் புதிய பொரு­ளா­தார கொள்­கை­கள் எவ்­வாறு அமை­யும் மற்­றும் அதன் பலன்­கள் எவ்­வாறு இருக்­கும் என்­பது குறித்த சந்­தே­கங்­கள், சந்­தை­யில் சரிவை ஏற்­ப­டுத்­தின.இந்த வாரம், நிப்டி ரெசிஸ்­டென்ஸ், 9,950 ஆகும். இதை கடக்­கும் நிலை­யில், 10,100 அடுத்த இலக்­கா­கும்.சப்­போர்ட் 9,680 மற்­றும் 9,570 ஆக அமை­யும்.
கவ­னிக்க வேண்­டிய பங்­குகள்மெஹமானி ஆர்கானிக்ஸ், கிரான்யூல்ஸ், ஜெய் கார்ப், ஆதித்ய பிர்லா பேஷன், முஞ்சால் ஆட்டோ

முருகேஷ் குமார்

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)