பதிவு செய்த நாள்
13 செப்2017
01:14
புதுடில்லி : பங்கு வர்த்தக நேரத்தை நீட்டிக்க வேண்டும் என, பங்குச் சந்தைகள் விடுத்துள்ள கோரிக்கை குறித்து, ‘செபி’ பரிசீலித்து வருகிறது.
இது குறித்து, ‘செபி’ அதிகாரி ஒருவர் கூறியதாவது: பங்குச் சந்தை வர்த்தகம், காலை, 9:00 மணிக்கு துவங்கி, மாலை, 3:30 மணிக்கு முடிவடைகிறது. இதை, சர்வதேச பங்குச் சந்தை வர்த்தகத்திற்கு, சற்று நெருக்கமாக மாற்றி அமைக்க, இந்திய பங்குச் சந்தைகள் விரும்புகின்றன. இதனால், பங்குச் சந்தையில் சர்வதேச முதலீடுகள் பெருகும்; பங்கு வர்த்தகம் அதிகரிக்கும் என்பதுடன், பங்குச் சந்தைகள் வருவாயும் உயரும்.
சில ஆண்டுகளுக்கு முன், இத்திட்டம் முன்வைக்கப்பட்ட போது, பங்குத் தரகு நிறுவனங்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தற்போது, பங்குச் சந்தைகள் எழுச்சியுடன் உள்ளதால், மீண்டும், வர்த்தக நேரத்தை நீட்டிக்கும் திட்டம் குறித்து பேசப்படுகிறது. மாலை, 5:00 மணி வரை, பங்குச் சந்தை வர்த்தகத்தை நீட்டிப்பது குறித்து, ‘செபி’ பரிசீலித்து வருவதாக தெரிகிறது. எனினும், மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்த பின்னரே, முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|