பதிவு செய்த நாள்
15 செப்2017
23:50
மும்பை : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ முழு நேர உறுப்பினர் தேர்வுக்கான நேர்காணலில், ஒரு சிலர் பங்கேற்காததால், அவர்களுக்காக, நேர்காணலை ஒத்தி வைத்துள்ளது.
‘செபி’யின் மூன்று முழு நேர உறுப்பினர்களில் ஒருவரான, எஸ்.ராமன் ஓய்வு பெறுவதையொட்டி, புதிய உறுப்பினரை தேர்வு செய்வதற்கான நேர்காணல், 11ம் தேதி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இப்பதவிக்கு, ‘செபி’ செயல் இயக்குனர்கள், எஸ்.கே.மோஹன்டி, ஆனந்தா பருவா மற்றும் முன்னாள் செயல் இயக்குனர், ரங்கநாயகுலு, மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை ஆலோசகர், சக்சேனா ஆகியோருடன், சில பொதுத் துறை வங்கி தலைவர்கள், மத்திய அரசு உயரதிகாரிகளும் போட்டியிட்டனர். ஆனால், நேர்காணல் தினத்தன்று, ஒரு சிலர் மட்டுமே பங்கேற்றதால், அனைவரும் பங்கேற்கும் வகையில், நேர்காணல், 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, தகவலறிந்த ஒருவர் கூறுகையில், ‘நேர்காணல் அன்று, பங்குச் சந்தையில், பழுத்த அனுபவம் வாய்ந்த சிலர் பங்கேற்க முடியவில்லை. அதனால், அனைவரும் பங்கேற்பதற்காக, நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|