பதிவு செய்த நாள்
21 செப்2017
00:38
மும்பை : ‘நாட்டின் பொருளாதாரம், 2016 செப்., முதல், உண்மையாகவே மந்த நிலையில் உள்ளது’ என, ஆய்வு நிறுவனமான, எஸ்.பி.ஐ., ரிசர்ச் தெரிவித்து உள்ளது.
‘தற்போதைய பொருளாதார மந்த நிலை, தொழில்நுட்பக் காரணங்களால் ஏற்பட்டுள்ள குறுகிய கால தாக்கமே. உண்மையில், பொருளாதாரம் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது’ என, பரவலாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றுக்கு மாறான வகையில், எஸ்.பி.ஐ., ரிசர்ச் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
கவலை வேண்டாம்:
கடந்த ஆண்டு செப்., முதல், ஜி.டி.பி., எனப்படும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்து உள்ளது. இது, நடப்பு நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான, முதல் காலாண்டு வரையிலும் நீடித்து உள்ளது. ஆகவே, இந்த மந்த நிலையை, தொழில்நுட்ப புள்ளி விபரங்கள் அடிப்படையில் கணிக்கப்பட்ட, குறுகிய கால தாக்கம் என்றோ அல்லது இந்த சுணக்கம் நிலையற்றது எனவோ கூற முடியாது. உண்மையில், ஜி.டி.பி., தொடர்ந்து மந்த நிலையில் இருக்கிறது. எனவே தான், இந்த மந்த நிலை தற்காலிகமானதா அல்லது இல்லையா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
இதற்கான பதில், அரசு திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளை அதிகரிப்பதில் அடங்கி உள்ளது. கடன் கொள்கையை மாற்றாமல், அதே சமயம், திட்டங்களுக்கு அதிகம் செலவிட வேண்டும். இதனால், நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும். தர நிர்ணய நிறுவனங்கள், கடன் தகுதி மதிப்பீட்டை குறைப்பதாக அச்சுறுத்தும். அதை பற்றி, கவலை வேண்டாம்.
பாதிப்பு இல்லை:
கடந்த, 2008ல், சர்வதேச பொருளாதார மந்த நிலையின் போது, இது போன்ற அச்சுறுத்தல் விடுத்த போதிலும், அதனால், பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இந்தியாவை பொறுத்தவரை, 25 ஆண்டுகளாக, தர நிர்ணய பட்டியலில், நிலையாக முன்னேறி வருகிறது. ஆகவே, உடனடியாக, திட்டச் செலவினங்களை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே, பொருளாதார சுணக்க நிலையில் இருந்து மீள முடியும். நிதி பொறுப்பு மற்றும் நிதிநிலை அறிக்கை மேலாண்மை சட்டம், நிதிப் பற்றாக்குறை இலக்கில், 0.5 சதவீதத்தை உயர்த்த வகை செய்கிறது. இதை பயன்படுத்தி, திட்டச் செலவினங்களை அதிகரிக்க வேண்டும். அதே சமயம், நிகர கடன்களை கட்டுக்குள் வைக்க வேண்டும்.
அதிகளவில், குறுகிய கால நிதிச் சந்தை கடன்களை வாங்குவது குறித்து பரிசீலிக்கலாம். வளமான மூலதனத்தை கொண்டுள்ள, வலிமையான பொதுத் துறை நிறுவனப் பங்குகளை திரும்பப் பெற்று, அதிகளவில், அரசு கடன் பத்திரங்களை வெளியிடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நிதியாண்டு ஜி.டி.பி.,
2013 – 14 6.52014 – 15 7.22015 – 16 7.92016 – 17 7.1
2017 – 18 5.7(ஏப்., – ஜூன்) (சதவீதத்தில்)
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|