பதிவு செய்த நாள்
23 செப்2017
00:29
புதுடில்லி : ‘நடப்பு பண்டிகை கால விற்பனை, மந்த நிலையில் இருக்கும்’ என, ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: பல்வேறு நகரங்களைச் சேர்ந்த, 7,659 நுகர்வோரிடம், வரும் பண்டிகை கால திட்டம் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 52 சதவீதத்தினர், பண்டிகை காலத்தில் பல்வேறு பொருட்கள் வாங்க, 10 ஆயிரம் ரூபாய் வரை செலவிட உள்ளதாகவும்; 28 சதவீதத்தினர், ஒரு ரூபாய் கூட செலவிட தயார் இல்லை எனவும் தெரிவித்து உள்ளனர். எனினும், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த, 19 சதவீதத்தினர், 10 ஆயிரம் – 30 ஆயிரம் ரூபாய் வரை, செலவிட இருப்பதாக கூறினர். இப்பிரிவினர் தான், சில்லரை விற்பனையாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளனர்.
ஆய்வில், 55 சதவீதத்தினர், முக்கிய பொருட்கள் எதையும் வாங்க விரும்பவில்லை என, தெரிவித்து உள்ளனர். அடுத்த ஓராண்டில், பொருட்கள் வாங்கினாலும், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவிட தயாராக இல்லை என, அவர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|