பதிவு செய்த நாள்
25 செப்2017
01:02
கச்சா எண்ணெய் விலை, கடந்த இரு வாரங்களாக, சர்வதேச சந்தையில் உயர்ந்த வண்ணம் உள்ளது. ஆகஸ்ட் மாத சரிவிற்குப் பிறகு, செப்டம்பர் மாதத்தில், கடந்த மூன்று வாரங்களாக, விலை அதிகரித்து வியாபாரமாகியது.அமெரிக்காவில் ஏற்பட்ட சூறாவளிப் புயல் காரணமாக, ஆழ்குழாய் எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு நிறுவனங்களுடைய செயல்பாடு பாதிப்புக்கு உள்ளாகியது. மேலும் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான, ஒபெக் கூட்டத்தில் செய்துகொண்ட, உற்பத்தி குறைப்பு ஒப்பந்தம், 2018 மார்ச் மாதத்தோடு முடிவடைய உள்ளது.இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை, மீண்டும் சில மாதங்களுக்கு நீட்டிக்க ஆலோசனை செய்யப்பட்டது. இதனால், சந்தையில் தட்டுப்பாடு அதிகரிக்கும் என்ற கோணத்தில், விலை ஒரு பேரல், 49.19 டாலரில் இருந்து, 51.11 டாலர் என்ற நிலையில், உயர்ந்து, வெள்ளியன்று வியாபாரம் முடிவுற்றது.கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு, தினசரி வியாபார முடிவு, 50 டாலரை தாண்டியது, இப்போதுதான். இதை வைத்துப் பார்க்கும்போது, வரும் நாட்களில் விலை உயர்வு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த இலக்கு, 52.20 டாலர் மற்றும், 53.50 டாலர் ஆகும்.லிபியா மற்றும் நைஜீரியா நாடுகளும், தங்களது உற்பத்தி குறைப்பை தொடர இருப்பதாக, குவைத் நாட்டின் எண்ணெய் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. தற்போது, நைஜீரியாவின் சராசரி எண்ணெய் உற்பத்தி தினசரி, 1.69 மில்லியன் பேரல்களாகும். மேலும், ஒபெக் அமைப்பில் இல்லாத ரஷ்யாவும் எண்ணெய் உற்பத்தி குறைப்பு நீட்டிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|