பதிவு செய்த நாள்
25 செப்2017
16:59
மும்பை : கடந்தவாரம் ஆரம்பத்தில் உயர்வுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள் அதன்பின்னர் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், வர்த்தகவாரத்தின் முதல்நாளான இன்று(செப்., 25) கடும் சரிவை சந்தித்தன. அதிலும் ஒரு மாதங்களில் இல்லாத அளவுக்கு பங்குச்சந்தைகள் வீழ்ச்சி கண்டன.
உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு, முன்னணி நிறுவன பங்குகள் சரிவு போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே துவங்கின. தொடர்ந்து சரிவுடன் இருந்த வர்த்தகம் நாள்முழுக்க சரிவுடனேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 295.81 புள்ளிகள் சரிந்து 31,626.63-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 91.80 புள்ளிகள் சரிந்து 9,872.60-ஆகவும் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தில் அதானி போர்ட் பங்குகள் 3.29 சதவீதம் சரிந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|