பதிவு செய்த நாள்
05 அக்2017
23:51
புதுடில்லி : ‘‘மொபைல் போன் சேவையில், நிறுவனங்கள் ஒன்றிணைந்து வருவதால், போட்டி குறைந்துள்ளது,’’ என, பார்தி ஏர்டெல் நிறுவனர், சுனில் மிட்டல் தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள், 4.60 லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்கி உள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, அமைக்கப்பட்ட அமைச்சரவைக் குழு, அதன் பரிந்துரையை, தொலை தொடர்பு ஆணையத்திடம் அளித்துள்ளது. அதில், அகண்ட அலைவரிசை ஏலத் தொகையை, திரும்ப செலுத்தும் காலம், 10 ஆண்டுகளில் இருந்து, 16 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும் என்ற கருத்தை, தொலை தொடர்பு ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.
மேலும், மொபைல் போன் சேவை நிறுவனங்களிடம், அபராதத் தொகைக்கு வசூலிக்கப்படும் வட்டியை குறைக்கும் யோசனைக்கு, ஆதரவு தெரிவித்துள்ளது. இவற்றையெல்லாம் உள்ளடக்கிய, தொலை தொடர்பு அமைச்சகம் வெளியிட உள்ள அரசாணையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். தற்போது, தொலை தொடர்பு சேவை துறையில், நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அதனால், போட்டியும் குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|