பதிவு செய்த நாள்
09 அக்2017
00:10
பங்குச் சந்தை முதலீடு தொடர்பாக, பல பாடங்கள் இருக்கின்றன. இதுதவிர, பங்குச் சந்தை போக்கு தொடர்பாக, பலவித கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன.
சந்தை இறங்கும் போது, என்ன செய்ய வேண்டும்; காளை போக்கின் போது, என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக, பலவித கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இவற்றில், பல வெறும் மாயைகளாக கூட இருக்கலாம். எனவே, இவற்றை ஆராயாமல், அப்படியே பின்பற்றக் கூடாது.உதாரணத்திற்கு, பல முதலீட்டாளர்கள் பத்திரங்களை வாங்கி வைத்துக் கொள்வது, மியூச்சுவல் பண்டு அல்லது, இ.டி.எப்., திட்டங்களில் முதலீடு செய்வதை விட, பாதுகாப்பானது என, கருதுகின்றனர்.
இதனால், வட்டி விகித போக்கின் தாக்கத்தில் இருந்து, தப்பிக்கலாம் என, நினைக்கின்றனர். ஆனால், பத்திரங்கள் சார்ந்த மியூச்சுவல் பண்டு என்பவை, பத்திரங்களின் தொகுப்பே ஆகும். பத்திரங்களை முதிர்வு காலம் வரை வைத்திருக்கும் போது, முதிர்வு தொகை கிடைக்கும் என்றாலும், பத்திரங்கள் வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்டவை என்பதால், அதன் தாக்கம் நிச்சயம் இருக்கும். ஆக, சந்தையில் எப்போதும், ‘ரிஸ்க்’ இருக்கும். அதை சரியாக கையாள்வதே முக்கியம்.
அதே போல, சந்தையில் குறைவான பரிவர்த்தனை நிகழும் போது, அதில் பங்கேற்காமல் விலகி இருக்க வேண்டும் என்ற கருத்தும் இருக்கிறது. வழக்கத்தை விட, வர்த்தக அளவு குறைவாக இருந்தால், நிதி கழக முதலீட்டாளர்கள் பங்கேற்காததை உணர்த்துவதாக, இதற்கு காரணம் சொல்லப்படுகிறது. ஆனால், வர்த்தக அளவிற்கும், சந்தையின் போக்கிற்கும் தொடர்பு இல்லை. உண்மையில், சரியும் சந்தியிலேயே பலரும் அதிகமாக பங்குகளை விற்கின்றனர்; பயமே இதற்கான காரணம்.
இதற்கு நேர் எதிராக, பணம் பார்ப்பதற்கான வாய்ப்பு, சந்தையில் காத்திருப்பதாக சொல்லப்படுவதையும், அப்படியே நம்பி விடக்கூடாது. ஒரு பங்கை வாங்குபவர் இருக்கிறார் என்றால், அதன் பின்னே, விற்பவரும் இருக்கிறார் என்பதே, சந்தையின் அடிப்படை. எனவே, திடீரென எந்த பணமும் பாய்ந்து வந்து விடாது. பங்குகளை கடனில் வாங்குவதை குறிக்கும், மார்ஜின் கடன் விகிதம் அதிகமாக இருப்பதோ, குறைவாக இருப்பதோ, சந்தையின் போக்கு தொடர்பான எந்த குறிப்பையும் கொண்டு இருப்பதில்லை. இது, கடந்த கால செயல்பாட்டை குறிக்கும் காரணியாக இருக்கிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|