பதிவு செய்த நாள்
12 அக்2017
00:01
புதுடில்லி : அனில் அம்பானி தலைமையிலான, ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின், பங்கு வெளியீட்டுக்கு, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான, ‘செபி’யிடம் விண்ணப்பித்து இருந்தது. இது தொடர்பான ஆவணங்களை பரிசீலித்த, ‘செபி,’ ரிலையன்ஸ் நிப்பான் லைப் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 2,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம், இந்தியாவில், சொத்து மேலாண்மை நிறுவனம் ஒன்று, முதன்முறையாக, பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஜே.எம். பைனான்ஷியல், சி.எல்.எஸ்.ஏ., நோமுரா, ஆக்சிஸ் கேப்பிட்டல் ஆகியவை, நிர்வகிக்க உள்ளன.அனில் அம்பானியின், ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனங்கள், ஏற்கனவே, பங்குச் சந்தை பட்டியலில் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|