பதிவு செய்த நாள்
13 அக்2017
05:57
பெங்களூரு : டி.சி.எஸ்., எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் நிகர லாபம், ஜூலை – செப்., வரையிலான இரண்டாவது காலாண்டில், 8.4 சதவீதம் உயர்ந்து, 6,446 கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது. இது, முதல் காலாண்டில், 5,945 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், இந்நிறுவனத்தின் வருவாய், 3.2 சதவீதம் உயர்ந்து, 30,541 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
இந்நிறுவனம், அதன் பங்கு முதலீட்டாளர்களுக்கு, பங்கு ஒன்றுக்கு, ஏழு ரூபாய் டிவிடெண்டு வழங்குவதாக அறிவித்துள்ளது. டி.சி.எஸ்., மதிப்பீட்டு காலாண்டில், 15,868 பேரை பணிக்கு அமர்த்தியுள்ளது. ‘‘வாடிக்கையாளர்கள், மின்னணு தொழில்நுட்ப வசதிக்கு அதிக அளவில் செலவிட்டு வருவது, நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சிக்கு துணை புரிந்துள்ளது,’’ என, டி.சி.எஸ்.,நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ராஜேஸ் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.
டி.சி.எஸ்., நிறுவனத்தின் சாதகமான நிதிநிலை அறிக்கை காரணமாக, நேற்று, அதன் பங்கின் விலை, 46.55 ரூபாய் அதிகரித்து, 2,546.90 ரூபாயில் நிலை பெற்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|