பதிவு செய்த நாள்
18 அக்2017
23:49
புதுடில்லி : ‘‘வரும், 2019க்குள், தோல் பொருட்கள் ஏற்றுமதி, 10 சதவீதம் அதிகரிக்கும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர், சி.ஆர்.சவுத்ரி தெரிவித்து உள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது: தோல் பொருட்கள் துறையை மேம்படுத்துவதற்காக, மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டின் தோல் பொருட்கள் ஏற்றுமதி, தற்போது, 566 கோடி டாலராக உள்ளது. இது, 2019க்குள், 10 சதவீதம் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் சட்டம், ஜூலையில், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் உடனடியாக, தற்போது அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், இனி காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் அனைத்தும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியுள்ளன. இந்த மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு, அரசு அங்கீகாரத்துடன், பட்டப் படிப்பு, டிப்ளமா சான்றிதழ்கள் வழங்கப்படும். இது, தோல் பொருட்கள் துறையில், இளைஞர்கள் பயிற்சி பெறுவதை ஊக்குவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|