பதிவு செய்த நாள்
22 அக்2017
04:57
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ‘எலக்ட்ரானிக் ஸ்டபிலிட்டி கன்ட்ரோல்’ என்ற புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத்தை, அதன், ‘பிரைமா மற்றும் சிக்னா’ டிரக்குகளில் அறிமுகப்படுத்தி உள்ளது. இத்துடன், அனைத்து டிரக்குகள் மற்றும் பஸ்களில், ‘ஆட்டோமேட்டிக் டிராக் ஷன் கன்ட்ரோல்’ மற்றும், ‘ஹில் ஸ்டார்ட் எய்டு’ என்ற பாதுகாப்பு அம்சங்களும் இணைக்கப்படுவதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய தொழில்நுட்பங்களின் இணைப்பால், நெடுந்தொலைவு செல்லும் வாகனங்களின் ஸ்திரத்தன்மையும், பாதுகாப்பும் அதிகரிக்கும். இதன் மூலம், வாகன விபத்துகளை தடுக்கலாம் என, டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. பைக்கை கழுவுவது எப்படி?பைக்கை, அதிக சக்தி இல்லாத, சோப்பு பவுடர் பயன்படுத்தி, அழுக்கை துடைக்க வேண்டும். வீட்டில், ஸ்பிரேயர் இருந்தால், அதன் மூலம், சோப்பு நீரில் அலசலாம். பைக்கின் வெளிப்புறத்தில் தான், முதலில் தண்ணீரை பீய்ச்ச வேண்டும். ‘கார்பரேட்டர்’ அல்லாமல், ‘பியூல் இன்ஜக்டட்’ வகை, பைக்காக இருந்தால், மின்னணு பாகங்களில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.‘ரேடியேட்டரை’ சுத்தம் செய்யும் போது, அதிக அழுத்தமின்றி, தண்ணீரை மெதுவாக, பீய்ச்சி அடிக்க வேண்டும். பைக்கை கழுவிய பின், அதை துடைப்பது அவசியம். தண்ணீர் ஊற்றி கழுவியதுமே, துணியால் துடைக்கக் கூடாது. அரை மணி நேரம், வாகனத்தை அப்படியே விட்டு விட்டால், அதில் தேங்கியுள்ள நீர், தானாக வடியும். அதன் பின்னே, துடைக்க வேண்டும். செயினை சுத்தப்படுத்தும் போது, ஒவ்வொரு பல் இணைப்பிலும், ‘லுாப்ரிகன்ட்’ ஆயிலை, ஒரு சொட்டு விட வேண்டும். இது, கடைகளில் கிடைக்கும். செயினை, பின்புறமாக சுழற்றியபடி, ஆயிலை விட வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|