பதிவு செய்த நாள்
24 அக்2017
00:28
புதுடில்லி : ‘மத்திய அரசு, நடப்பு நிதியாண்டிற்கான, நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்டுவது, கடினம் அல்ல’ என, எஸ்.பி.ஐ., ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசு, நடப்பு நிதியாண்டிற்கான நிதிப் பற்றாக்குறையை, 3.2 சதவீதமாக நிர்ணயித்துள்ளது. ஆனால், வருவாய் குறைவால், இந்த இலக்கை எட்டுவது சிரமம் என, பல தரப்பினர் தெரிவிக்கின்றனர். அது, தவறான கருத்தாக தெரிகிறது. ஏனெனில், வருவாய் குறைவு காரணமாக ஏற்படும் இழப்பை, பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், மத்திய அரசு ஈடு செய்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு, 2017 – 18ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், 72 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதில், இதுவரை, 60 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்பட்டு உள்ளது. அதனால், அடுத்த ஐந்து மாதங்களில், எஞ்சிய தொகையை திரட்டுவதும் சுலபமாகவே இருக்கும். அவ்வாறு செய்ய முடிந்தால், அது, 2009 – 10ம் நிதியாண்டிற்கு பின், முதன்முறையாக, பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை இலக்கை எட்டுவதாக இருக்கும்.
அதே சமயம், மத்திய அரசு, குறிப்பிடத்தக்க அளவிற்கு திட்டச் செலவுகளையும் குறைக்கும் என, தெரிகிறது. இதன்படி, நடப்பு நிதியாண்டிற்கான மூலதன செலவினத்தில், 70 ஆயிரம் கோடி ரூபாய்; வருவாய் செலவினத்தில், 38 ஆயிரம் கோடி ரூபாய் குறைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயல்பாடுகள், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை ஆகியவற்றின் மூலம், நிதிப் பற்றாக்குறை இலக்கை, 3.2 சதவீதம் என்ற அளவிலேயே, தக்க வைத்துக் கொள்ள முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|