பதிவு செய்த நாள்
19 நவ2017
07:01
புதுடில்லி: ‘இன்போசிஸ்’ நிறுவனம், 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அதன் பங்குகளை, சந்தையில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.நவ., 30 – டிச., 14 வரை, பங்குகளை திரும்பப்பெற உள்ளதாக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம், இன்போசிஸ் தெரிவித்துள்ளது.இதன்படி, இந்நிறுவனம், ஒரு பங்கிற்கு, 1,150 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்து, 11.30 கோடி பங்குகளை, சந்தையில் இருந்து திரும்பப் பெற திட்டமிட்டு உள்ளது.இன்போசிஸ் துவங்கி, 36 ஆண்டுகளில், முதன்முறையாக, தற்போது தான் பங்குகளை சந்தையில் இருந்து திரும்பப் பெறுகிறது. இந்நிறுவனத்திடம் உபரியாக உள்ள பங்கு மூலதனத்தை, பங்கு முதலீட்டாளர்களுக்கு வழங்கும் வகையில், பங்குகளை திரும்பப் பெறும் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.இத்திட்டத்தை, பல ஆண்டுகளாக, இன்போசிஸ் நிறுவனர்கள், முன்னாள் மூத்த அதிகாரிகள் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில், டி.சி.எஸ்., நிறுவனம், 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, பங்குகளை திரும்பப் பெற்றது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|