பதிவு செய்த நாள்
21 நவ2017
03:36
புதுடில்லி : வலைதளங்களில் புழங்கும், ‘பிட்காய்ன்’ என்ற மெய்நிகர் கரன்சியின் மவுசு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நேற்று, மெய்நிகர்கரன்சி சந்தையில், ‘பிட்காய்ன்’ மீதான வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. வர்த்தகத்தின் இடையே, ஒரு கட்டத்தில், பிட்காய்ன் விலை, முதன் முறையாக, 8,071.05 டாலரை எட்டியது. இது, இந்தாண்டின் துவக்கத்தில் காணப்பட்ட விலையை விட, 700 சதவீதம் அதிகம். எனினும், இந்த கரன்சி, இந்தாண்டு மூன்று முறை பெரும் சரிவைக் கண்டது. பிட்காய்ன் மதிப்பு, 25 சதவீதம் வரை குறைந்து இருந்தது. இம்மாத துவக்கத்தில், இதன் மதிப்பு, 29 சதவீதம் வீழ்ச்சி கண்டிருந்தது.இதற்கு, ‘பிட்காய்ன் கேஷ்’ போன்ற போட்டி, மெய்நிகர் கரன்சிகள் பெருகி வருவது தான் காரணம் என கூறப்படுகிறது.எனினும், அதிக இடர்ப்பாட்டிற்கு வாய்ப்புள்ள பிட்காய்ன் கரன்சிக்கு, முதலீட்டு வல்லுனர்களின் ஆதரவு உள்ளது. மிகக் குறைந்த பரிவர்த்தனை கட்டணம், வேகமான செயல்பாடு போன்ற அம்சங்களால், பிட்காய்ன் வர்த்தகத்திற்கு மவுசு அதிகரித்து, அதன் மதிப்பு உயர்ந்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|