பதிவு செய்த நாள்
23 நவ2017
23:58
புதுடில்லி : ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டதால், டாபர், ஹிந்துஸ்தான் யூனிலீவர், மாரிக்கோ உள்ளிட்ட நிறுவனங்கள், நுகர்பொருட்கள் விலையை குறைத்துள்ளன.
சமீபத்தில், ஜி.எஸ்.டி., கவுன்சில், 210 பொருட்களின், ஜி.எஸ்.டி.,யை குறைத்தது. அவற்றில், 178 பொருட்களின் வரி, 28லிருந்து, 18 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதன் பயனால், நுகர்பொருட்கள் விலை குறைந்துள்ளது.
இது குறித்து, ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘50 கிராம் எடையுள்ள, புரூ கோல்டு காபியின் விலை, 145 ரூபாயில் இருந்து, 111 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது. அடுத்தடுத்து, மேலும் சில பொருட்களின் விலை குறைக்கப்படும்’ என்றார்.
மாரிக்கோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, விவேக் கார்வே கூறுகையில், ‘‘ஹேர் ஜெல்ஸ், ஹேர் க்ரீம்ஸ், தேக பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில், பொருட்களின் விலை குறைக்கப்பட்டு உள்ளது. ‘‘கையிருப்பில் உள்ள பொருட்கள், குறைக்கப்பட்ட புதிய விலை, ‘ஸ்டிக்கர்’ உடன், விற்பனை செய்யப்படுகின்றன,’’ என்றார்.
டாபர் இந்தியா நிறுவனம், ஷாம்பூ, சரும பாதுகாப்பு, வீட்டு பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில், பொருட்களின் விலையை, 9 சதவீதம் குறைத்து உள்ளதாக தெரிவித்துள்ளது.
பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘ஜி.எஸ்.டி., குறைப்பு நடவடிக்கையை, நிறுவனம் வரவேற்கிறது. இதன் பயன்கள், வாடிக்கையாளரை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
ஐ.டி.சி., நிறுவனமும், பல்வேறு பொருட்களின் விலையை குறைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, மேலும் பல நுகர்பொருள் நிறுவனங்கள், விலை குறைப்பு அறிவிப்பை வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|