பதிவு செய்த நாள்
24 நவ2017
00:08
புதுடில்லி : நலிவடைந்த மற்றும் திவால் நிறுவனங்கள் சட்டத்திருத்தம் தொடர்பான, அவசர சட்டத்திற்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், நேற்று ஒப்புதல் அளித்தார்.
இது குறித்து, அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: நலிவடைந்த மற்றும் திவால் நிறுவனங்கள் சட்டத்திருத்தம் தொடர்பான, அவசர சட்டத்திற்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்து உள்ளார். இந்த திருத்தம் மூலம், வங்கிக் கடனை, வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாதோர், திவால் நடவடிக்கைக்கு உள்ளாகும் தங்கள் நிறுவனங்களை, தாங்களே வாங்குவது தடை செய்யப்படுகிறது.
ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு, வங்கிகளின் வாராக்கடன் பட்டியலில் இடம் பெற்றோரும், வட்டி உட்பட அசலை திரும்பச் செலுத்த முடியாதோரும், திவாலுக்கு ஆளான, தங்கள் நிறுவனங்களின் விற்பனையில் பங்கேற்று, வாங்க, சட்டத்திருத்தம் தடை செய்கிறது. அவசர சட்டம் அமலுக்கு வருவதற்கு முன், கடன் தீர்வுக்காக, நிறுவனங்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களை, அவற்றுக்கு அங்கீகாரம் வழங்காத பட்சத்தில், கடன் அளித்தோர் குழு, தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|