பதிவு செய்த நாள்
27 நவ2017
01:09
முடிவெடுப்பதில் உள்ளுணர்வை நம்புவதில் உள்ள சிக்கல்களை விளக்கும், சிப் ஹீத் மற்றும் டேன் ஹீத் அவற்றுக்கு தீர்வு கண்டு, சிறந்த முடிவுகளை எடுக்கும் வழிகளை, தங்கள், ‘டிசிஸிவ்’ புத்தகத்தில் விளக்குகின்றனர்.
முடிவெடுக்கும் போது, உள்ளுணர்வு சொல்வதை கேட்டு நடப்பதில், மூன்று விதமான சிக்கல்கள் உள்ளன. முதல் சிக்கல் என்னவெனில், நாம் இரண்டுக்கும் மேற்பட்ட வாய்ப்புகளை பரிசீலிப்பதில்லை என்பதாகும். ஓஹியோ பல்கலைக்கழகத்தின் பால் நட் எனும் ஆய்வாளர், முக்கிய நிறுவனங்களின் முடிவுகள் குறித்து நடத்திய ஆய்வில், 69 சதவீத சூழலில், ஒரே ஒரு மாற்று வாய்ப்பு மட்டுமே இருந்ததாக குறிப்பிடுகிறார். இரண்டாவது சிக்கல், நாம் பெரும்பாலும் குறுகிய கால உணர்வுகளுக்கு இலக்காகி, நீண்ட கால சித்திரத்தை பார்க்கத் தவறி விடுகிறோம். உங்களுடைய கடந்த கால மோசமான முடிவுகளை திரும்பி பார்த்தாலே, இதை புரிந்து கொள்ள முடியும். மூன்றாவதாக நாம் பெரும்பாலும், நம் முடிவுகள் சரியாக இருக்கும் என, நம்பிவிடுவது தான். ஆனால் உண்மையில் அவை அவ்வாறு இருப்பதில்லை. இந்த சிக்கல்களை தவிர்க்க, வாய்ப்புகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கையில் ஒரு மாய விளக்கு இருப்பதாக நினைத்து, அதில் தேய்த்ததும் வாய்ப்புகள் எல்லாம் மறைந்து போய்விட்டதாக அனுமானித்து, புதிய மாற்று வாய்ப்புகள் குறித்து யோசிக்க வேண்டும். நம் முன் நல்ல வாய்ப்புகள் இல்லை எனும் அனுமானத்தில், புதிய வாய்ப்புகளை தேடும் போது, சிறந்த முடிவுகள் தோன்றும் வாய்ப்புள்ளது. மற்றொரு வழி, பிரச்னையில் இருந்து விலகி நின்று யோசிப்பதாகும். ஒருமுறை ஆய்வின் போது, மாணவர்களுக்கு இரண்டு விதமான வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டன. முதல் வேலை, நல்ல சம்பளம் ஆனால் திருப்தி அளிக்காதது; இரண்டாவது வேலை திருப்தி அளிக்க கூடியது. ஆனால் குறைந்த சம்பளம் என தெரிவிக்கப்பட்ட போது, 66 சதவீத மாணவர்கள் முதல் வேலையை தேர்வு செய்தனர். ஆனால் நண்பர்களுக்கு பரிந்துரைக்குமாறு கூறிய போது, 88 சதவீத மாணவர்கள் இரண்டாவது வேலையை பரிந்துரைப்போம் என்றனர். நெருங்கிய நண்பர்களுக்கு எது சிறந்தது என யோசித்த போது, குறுகிய கால நலனை விட்டு விலகி, அவர்களால் யோசிக்க முடிந்தது.
முடிவெடுப்பதற்கு முன், சோதித்து பார்த்து விடுவது இன்னொரு சிறந்த வழியாகும். பெரிய முடிவுகளை எடுக்கும் முன், நடைமுறை நிலையை அறிய, அவற்றை சோதித்து பார்க்க வேண்டும். தவறாக நடந்ததால் என்னாகும் எனும் நிலைக்கு தயாராக இருப்பது ஏற்றது. எப்போதும் மேலும் ஒரு மாற்று வாய்ப்பை கைவசம் வைத்திருப்பது நல்லது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|