பதிவு செய்த நாள்
01 டிச2017
23:59
புதுடில்லி:மாருதி சுசூகி இந்தியாநிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நிறுவனத்தின் மொத்த கார்கள் விற்பனை, நவம்பரில், 14.1 சதவீதம் அதிகரித்து, 1.55 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 1.35 லட்சமாக இருந்தது.இதே காலத்தில், உள்நாட்டு விற்பனை, 15 சதவீதம் உயர்ந்து, 1.26 லட்சத்தில் இருந்து, 1.45 லட்சமாக அதிகரித்துள்ளது. எனினும், சிறிய வகை ஆல்டோ மற்றும் வேகன் ஆர் கார்கள் விற்பனை, 1.8 சதவீதம் குறைந்து, 38,204 ஆக சரிவடைந்து உள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில்,காம்பேக்ட் பிரிவைச் சேர்ந்த, சுவிப்ட், எஸ்டிலோ,டிசையர், பலேனோ ஆகிய கார்கள் விற்பனை, 32.4 சதவீதம் ஏற்றம் கண்டு, 65,447 ஆக உள்ளது.எர்டிகா, எஸ் - கிராஸ், விட்டாரா பிரெஸ்ஸா உள்ளிட்ட கார்கள் விற்பனை, நவம்பரில், 34 சதவீதம் அதிகரித்து, 23,072 ஆக வளர்ச்சியடைந்து உள்ளது.
இது, கடந்த ஆண்டு இதே காலத்தில், 17,215 ஆக இருந்தது. ஓம்னி மற்றும் இ - எகோ வேன்களின் விற்பனை, நவம்பரில், 10.8 சதவீதம் அதிகரித்து, 13,565 ஆக உள்ளது. மேலும், நிறுவனத்தின் ஏற்றுமதி, 9,300 ஆக உயர்ந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|