பதிவு செய்த நாள்
03 டிச2017
00:32
இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை, இந்தியாவில், வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கான மாபெரும் கண்காட்சி, டில்லியில் நடைபெறுவது வழக்கம். இதில், இருசக்கரம் மற்றும் கார் நிறுவனங்கள், தாங்கள் அறிமுகப்படுத்த உள்ள புதிய வாகனங்கள்; எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த கருதியுள்ள வாகனங்களை காட்சிக்கு வைக்கும்.
நாடு முழுவதும் இருந்து, வாகன ரசிகர்கள், ஐந்து நாட்களுக்கு அங்கு குவிந்து விடுவர். இதில், இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களும், தங்களின் வாகனங்களை காட்சிப்படுத்தும்.
ஆனால், நிதி பிரச்னை மற்றும் சிக்கன நடவடிக்கை காரணமாக, 2018 பிப்ரவரியில் நடைபெற உள்ள கண்காட்சியில், பஜாஜ், ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர்; போக்ஸ்வேகன் நிறுவனத்தின் எட்டு பிராண்டுகள்; போர்டு, அசோக் லேலண்டு, நிஸான் உட்பட, 32 பல்வேறு நிறுவனங்கள், பங்கேற்க முடியாது என, தெரிவித்து உள்ளன.
இதில் பெரும்பாலும், பஸ் மற்றும் லாரி நிறுவனங்கள் அடக்கம். கண்காட்சி அரங்கத்தில் சிறிய இடத்திற்கு, 10 கோடி – 30 கோடி ரூபாய் செலவாகிறது. அதனால் தான், பல நிறுவனங்கள் இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|