பதிவு செய்த நாள்
08 டிச2017
10:51
புதுடில்லி : 2018 ம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் வாகனங்களின் விலையை 3 சதவீதம் உயர்த்த டோயோடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மற்ற கார் நிறுவனங்கள் டிசம்பர் மாதம் முதல் கார் விலையை குறைத்து, சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் டோயோடா நிறுவனமண வாகனங்களின் விலையை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. டோயோடா பார்சுனர் 4x2 எம்டி டீசல் காரின் விலை ரூ.81,000 க்கும் மேல் உயர்த்தப்பட உள்ளது.
டிசம்பர் 7 ம் தேதி முதல் பெங்களூருவில் விலை உயர்வை அமல்படுத்தி உள்ள டோயோடா நிறுவனம், ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் 3 சதவீதம் விலை .யர்வை அமல்படுத்த உள்ளது. வாகனங்களின் விலையை ஒருபுறம் உயர்த்தினாலும், இந்தியாவில் சுசுகி நிறுவனத்துடன் இணைந்து எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் டோயோடா திட்டமிட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|