பதிவு செய்த நாள்
12 டிச2017
00:58
மேட்டூர்;மேட்டூர், கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனம், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக ஹைட்ரஜன் பெராக்சைடு ஆலையை துவக்குகிறது.
மேட்டூரில், 1967ல், கெம்பிளாஸ்ட் சன்மார் ரசாயன ஆலை துவங்கப்பட்டது. இதன் வளாகத்திலுள்ள, நான்கு ஆலைகளில், பி.வி.சி.,ரெசின், காஸ்டிக் சோடா உள்ளிட்ட ரசாயன பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.பஞ்சாலை கழிவுபொன் விழா ஆண்டில்அடியெடுத்து வைத்துள்ள நிலையில், ஆலை வளாகத்தில் புதிதாக, 100 கோடி ரூபாய் முதலீட்டில், ஆண்டுக்கு, 53 ஆயிரம் டன் உற்பத்தித் திறனுள்ள, ஹைட்ரஜன் பெராக்சைடு ஆலையை துவக்குகிறது.
இது குறித்து, ஆலை செயல் இயக்குனர் (இயக்கம்) வெங்கடேசன் கூறியதாவது:ஹைட்ரஜன் பெராக்சைடு மருந்து பொருட்கள் தயாரிக்கவும், உணவு மற்றும் குளிர்பானங்கள் கெடாமல் பாதுகாக்கவும், கழிவுநீர் சுத்திகரிக்கவும், அழகு சாதன பொருட்கள் தயாரிப்புக்கும் பயன்படுகிறது. காகிதக்கூழ், பஞ்சாலை கழிவு, சாயப்பட்டறை கழிவுகளை சுத்திகரிக்க பயன்படுகிறது. தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில், காகித ஆலை, ஜவுளி உற்பத்தி ஆலைகள் அதிகமாக உள்ளன.இந்த ஆலைகள், தங்களுக்கு தேவையான ஹைட்ரஜன் பெராக்சைடை, ஆந்திர மாநிலம், சூலுார் பேட்டை, தனியார் ஆலையில் கொள்முதல் செய்தன.
அந்த ஆலை மூடப்பட்ட நிலையில், சமீபகாலமாக, மஹாராஷ்டிராவிலுள்ள தனியார் ஆலையில் கொள்முதல் செய்கின்றன. இதனால், தமிழகத்திலுள்ள ஜவுளி மற்றும் காகித உற்பத்தி ஆலைகளுக்கு செலவு அதிகரிக்கிறது.
போக்குவரத்து செலவு:மேட்டூர், கெம்பிளாஸ்ட் ஆலை வளாகத்தில், ஹைட்ரஜன் பெராக்சைடு ஆலை துவக்கப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில், ஜவுளி, காகித ஆலைகள் கொள்முதல் செய்யும் ஹைட்ரஜன் பெராக்சைடுக்கான போக்குவரத்து செலவு வெகுவாக குறையும்.இந்த ஆலை, 2018ல், இரண்டு அல்லது மூன்றாம் காலாண்டில் உற்பத்தியை துவங்கும்.ஆலை மூலம், 150 ஊழியர்களுக்கு நேரடியாகவும், ஏராளமான குடும்பத்தினருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|