பதிவு செய்த நாள்
13 டிச2017
00:16
மும்பை:முகேஷ் அம்பானியின், ‘ஆர்ஜியோ’ எனப்படும், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம், பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது.இதற்கான பணிகளில், ரிலையன்ஸ் குழுமம் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு, செப்., 5ல், தொலை தொடர்பு சேவையை துவக்கிய ஆர்ஜியோ, உலகிலேயே, மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும், தொழில்நுட்ப நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.வர்த்தக ரீதியிலான சேவை துவங்கிய, 170 நாட்களில், சராசரியாக, நாள் ஒன்றுக்கு, 6 லட்சம் பேர் வீதம், 10 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை, இந்நிறுவனம் ஈர்த்து சாதனை படைத்து உள்ளது.
இந்தாண்டு, செப்., நிலவரப்படி, 13.86 கோடி ஆர்ஜியோ சந்தாதாரர்கள் உள்ளனர். இந்தியாவில், 29 மாநிலங்களில், 18 ஆயிரத்திற்கும் அதிகமான நகரங்கள்; 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில், ஆர்ஜியோவின் நேரடி சேவைகள் கிடைக்கின்றன.
இந்நிறுவனத்தில், 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. செப்டம்பருடன் முடிந்த இரண்டாவது காலாண்டில், இதன் வருவாய், 6,147 கோடி ரூபாய்; நிகர இழப்பு, 270.59 கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|