பதிவு செய்த நாள்
15 டிச2017
00:44
புதுடில்லி:ஷேல்பி நிறுவனம், பல்நோக்கு மருத்துவமனைகளை நடத்தி வருகிறது. இந்நிறுவனம், டிச., 5 – 7 வரை, ஐ.பி.ஓ., எனப்படும், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கியது. இதன் பங்கு ஒன்றின் விலை, 245 – 248 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்க, தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களிடம் இருந்து, 4.47 மடங்கு; சில்லரை முதலீட்டாளர்களிடம் இருந்து, 2.97 மடங்கு; ஊழியர்களிடம் இருந்து, 1.43 மடங்கு விண்ணப்பங்கள் வந்தன.
மேலும், பெரும் பணக்காரர்கள் பிரிவில், 43 சதவீத விண்ணப்பங்கள் குவிந்தன.இதையடுத்து, பங்குகளை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கும் பணி நடைபெற்றது. இப்பணி முடிவடைந்ததை அடுத்து, இந்நிறுவனத்தின் பங்குகள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், இன்று பட்டியலிடப்படுகின்றன. இச்சந்தைகளில், இன்று முதல், ஷேல்பி நிறுவன பங்குகள் மீதான வர்த்தகம் துவங்குகிறது.
‘பங்கு வெளியீட்டில் திரட்டிய தொகை, பழைய கடன்களை செலுத்தவும்; மருத்துவ உபகரணங்களை வாங்கவும் பயன்படுத்தப்படும்’ என, ஷேல்பி தெரிவித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|