பதிவு செய்த நாள்
15 டிச2017
00:49
புதுடில்லி:‘‘அடுத்த
ஆண்டு, பொதுத் துறை வங்கி, அடிப்படை கட்டமைப்பு, வீட்டுவசதி
துறைகளை வலுப்படுத்த, முன்னுரிமை அளிக்கப்படும்,’’ என, மத்திய
நிதியமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்து உள்ளார்.
அவர், டில்லியில், ‘பிக்கி’ அமைப்பின் கூட்டத்தில், மேலும் பேசியதாவது:வங்கிகளிடம்
ஏராளமான நிதி உள்ளது. ஆனால், போதிய அளவு, மூலதன ரொக்க கையிருப்பு
இல்லாததால், கடன் வழங்கும் திறன் குறைவாக உள்ளது.வங்கி துறையில், 9.65 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் மற்றும் இடர்ப்பாட்டு கடன் உள்ளது.
பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்னைக்கு
தீர்வு காண, மத்திய அரசு, 2.11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, மறு
பங்கு மூலதன திட்டத்தை அறிவித்துள்ளது. இதனால், வங்கிகளின் கடன்
வழங்கும் திறன் மேம்படும்; இது, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.
அடிப்படை கட்டமைப்பு துறையில், நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் பிரிவுகளின் முன்னேற்றம் திருப்தி அளிக்கிறது.
ரயில்வே துறை வேகமாக வளர்ச்சி காண வேண்டும். இத்துடன், வீட்டு வசதி துறையை மேலும் வலிமையாக்க, முன்னுரிமை அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|