பதிவு செய்த நாள்
15 டிச2017
10:33
மும்பை : நேற்று வெளியிடப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.,வே வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் சென்செக்ஸ் 358 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய உள்ளது. ரூபாய் மதிப்பும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ.,வே சட்டசபை தேர்தலிலும் ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் அனைத்து துறை பங்குகளும் உயர்வுடன் காணப்படுகின்றன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (டிச.,15, காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 358.11 புள்ளிகள் உயர்ந்து 33,605.11 புள்ளிகளாகவும், நிப்டி 110.20 புள்ளிகள் உயர்ந்து 10,362.30 புள்ளிகளாகவும் உள்ளன.
அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, எச்டிஎப்சி வங்கி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 2.48 சதவீதம் உயர்ந்துள்ளன. இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்திருந்த போதிலும் ஆசிய சந்தைகளில் ஜப்பான், ஷங்காய், ஹாங்காங் பங்குச்சந்தைகளும், அமெரிக்க பங்குச்சந்தைகளும் சரிவுடனேயே காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|