பதிவு செய்த நாள்
15 டிச2017
23:53
புதுடில்லி:சரக்கு போக்குவரத்திற்கான, ‘இ – வே’ ரசீது நடைமுறை, ஜன., 1 முதல்,
அமலுக்கு வர உள்ளது.ஜி.எஸ்.டி.,யில், ஒரு மாநிலத்திற்கு உள்ளாகவோ அல்லது மாநிலங்களுக்கு இடையிலோ, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள சரக்கு போக்குவரத்துக்கு, ‘இ – வே’ ரசீது அவசியம். சரக்கு சப்ளையர், ‘ஆன் லைன்’ மூலம் இந்த ரசீதை தயாரித்து, அதன் நகலை, சரக்குடன் அனுப்ப வேண்டும்.
இதனால், ஒரு சரக்கு எந்த இடத்தில் இருந்து, யார் மூலம், யாரை சென்றடைகிறது என்பதை, வரி அதிகாரிகள், ‘ஆன் லைன்’ மூலம் சுலபமாக கண்காணிக்கலாம்.வரி ஏய்ப்பை தடுக்கும் இத்திட்டம், 2018 ஜன., 1 முதல், அமலுக்கு வர உள்ளது. இன்று, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தலைமையில், ஜி.எஸ்.டி.,கவுன்சில் கூட்டம், ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் நடைபெற உள்ளது.
அப்போது, ‘இ – வே’ ரசீது அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என, மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|