பதிவு செய்த நாள்
15 டிச2017
23:56
புதுடில்லி:உள்நாட்டு
உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், மத்திய நிதி அமைச்சகம்,
மொபைல் போன், புரொஜக்டர், ‘டிவி’ உள்ளிட்ட, மின் சாதனங்களின்
இறக்குமதி மீதான சுங்க வரியை உயர்த்தி உள்ளது.
இது குறித்து, மத்திய வருவாய் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க, மத்திய அரசு சில வகை மின் சாதனங்களின் இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது. இதன்படி, ‘டிவி’க்கு விதிக்கப்பட்டிருந்த சுங்க வரி, 10 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கம்ப்யூட்டர்
மானிட்டர், புரொஜக்டர் மீதான சுங்க வரி, இரு மடங்கு உயர்த்தி, 20
சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தொலைபேசி மற்றும் மொபைல்
போன் இறக்குமதி வரி, ௧5 சதவீதமாக விதிக்கப்பட்டு உள்ளது. வாட்டர்
ஹீட்டர், முடி அழகுபடுத்தும் கருவி ஆகியவற்றின் மீதான சுங்க வரி,
இரட்டிப்பாகி, 20 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது தவிர,
மின்சார சாதனங்களில் பயன்படுத்தும், ‘பிலமென்ட்டுகள்,’ மின் விளக்குகள் உட்பட, சில மின் சாதன பொருட்களுக்கும், சுங்க வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|