பதிவு செய்த நாள்
17 டிச2017
23:55
எளிமையான வழிகளை பின்பற்றுவதன் மூலம், நிதி வாழ்க்கையை சீராக்கி, வாழ்க்கையின் மற்ற அம்சங்களில் கவனம் செலுத்தலாம் என்கிறார், ‘ஈஸி மணி’ புத்தக ஆசிரியரான, லிஸ் புல்லியம் வெஸ்டன்.
நிதி வாழ்க்கையை கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதற்கான வழி, நிதி நிலையை சரியாக அறிந்திருப்பது தான். வங்கி சேமிப்பு கணக்கில் உள்ள தொகை, முதலீடு கணக்கு, செலுத்தப்படும் பில்கள் என, எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும். பில் செலுத்துவது, சேமிப்பு போன்றவற்றை தானியங்கி மயமாக்க வேண்டும். நிதி நிலை பற்றி தெளிவான புரிதல் கிடைத்தவுடன், செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். வீட்டிற்கு எடுத்து வரும் வருவாயில், 60 சதவீதம் மட்டுமே, மாத செலவுக்கு வைத்துக் கொள்ள வேண்டும்.
எஞ்சிய, 40 சதவீத தொகையை, ஓய்வு கால சேமிப்பு, அவசர நிதி, திட்டமிட்ட பெரிய செலவுகள் போன்றவற்றுக்கு வைத்துக் கொள்ள வேண்டும். துவக்கத்தில் இது கடினமாக தோன்றலாம். ஆனால், பணம் செலவாகும் வழிகளை கண்டறிந்து கட்டுப்படுத்தினால், இது சாத்தியமே. கிரெடிட் கார்டுகளில், கடன் தொகையை நிலுவையில் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். கிரெடிட் கார்டு பழக்கத்தில் கட்டுப்பாடு வரும் வரை, சில காலம் கார்டு பயன்படுத்தாமல் இருக்கலாம்.
ஓய்வு கால திட்டமிடலுக்கு ஏற்ற வகையில், தவறாமல் முதலீடு செய்ய வேண்டும். காப்பீடு பெறுவதிலும், போதிய கவனம் செலுத்த வேண்டும். ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு, வாகன காப்பீடு அவசியம். பாதுகாப்பை மட்டும் அளிக்கும், ‘டெர்ம் பாலிசி’ மிகவும் ஏற்றது.
வீடு மற்றும் வாகனம் வாங்கும் போது, உங்கள் சக்திக்கு மாறியவற்றை வாங்குவதை தவிர்க்க வேண்டும். அதன்பின், மாதத் தவணை செலுத்த முடியாமல் அவதிப்பட வேண்டும். எந்த பெரிய செலவை செய்வதற்கு முன், உங்கள் நிதி நிலையை ஆராய்ந்து பார்த்து, அதற்கேற்ப திட்டமிட வேண்டும். தேவையெனில், நிதி விஷயங்களில் வழிகாட்ட, நிதி ஆலோசகர்கள் உதவியை நாடலாம். நிதி ஆலோசகரை தேர்வு செய்யும் முன், அவர் நம்பகமானவரா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|